யமுனாவீடு -66

தொடர் கவிதைகள்

- Advertisement -

பறவையொன்று
மனத்திரையில் பறக்க
வேண்டுதலோடு நிற்கிறான்
எதிரே நின்றுகொண்டிருந்தது தெய்வம்

ஏன் நின்றுகொண்டிருக்கிறது
வேண்டுதலோடு நடக்கத்தொடங்கியவன்
ஒரு சுற்று முடித்திருந்தான்

விண்ணைநோக்கி உயர்ந்த கோபுரத்தைப் பார்த்தவன்
எதைக்கண்டானோ
சட்டென்று வெளியேறினான்

குழப்பத்தோடு இருந்தவன்
தெளிந்துபோயிருந்தான்
சற்றுமுன்னும்
சற்றுப்பின்னுமான
தனிமையின் சலலசலப்பு
அடங்கிப்போயிருந்தது

சித்திரைத்திருவிழாவின் பெருங்கூட்டத்தில்
கடந்துபோன எல்லோரும்
என்றோ ஏதுமற்றவர்களாக
மண்ணில்தானே கிடக்கப்போகிறார்கள்

விதியின் கணத்தில்
வாழ்க்கையைத் துரத்தும்
அவர்களுக்கு பெறவும்
கொடுக்கவும் ஏதோஇருக்கிறது

நாம் எல்லோருமே
கடைசியாக ஒன்றை உச்சரிப்போம்
இந்தப் பெரும்திரள் காணும் மீனாட்சியைப்போல
எனக்கு யமுனா.

பாண்டித்துரை
பாண்டித்துரைhttps://minkirukkal.com/author/pandiidurai/
பெயர் இராஜேந்திரன் நீதிப்பாண்டி. (அப்பா பெயர் இராஜேந்திரன்). சொந்த ஊர் அ.காளாப்பூர் (சிவகங்கை மாவட்டம்) வணிகவியல் இளங்கலை படித்த நான் தற்போது சிங்கப்பூரில் கட்டுமானத்துறையில் கட்டுமான பாதுகாப்பு பிரிவில் மேலாளராக பணிபுறிகிறேன். 2006 முதல் பாண்டித்துரை எனும் பெயரில் எழுதிவருகிறேன். அவநிதாவின் சொல் & மாயா மது உதயா எனும் இரண்டு கவிதை நூல்களை எழுதியிருக்கிறேன். குறும்படம் மீது உள்ள ஆர்வத்தில் நண்பர்களுடன் இணைந்து சில குறும்பட முயற்சிகள் செய்துள்ளேன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -