நான் விரும்பும் காந்தி

- Advertisement -

குறிப்புச்சட்டகம்

முன்னுரை

பிறப்பு

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

இந்திய விடுதலைப் போராட்டதில் ஈடுபடக் காரணம்

இந்திய விடுதலை போராட்டத்தில் காந்தியின் பங்கு

காந்தியின் தண்டி யாத்திரை

வெள்ளையனே வெளியேறு இயக்கம்

முடிவுரை

முன்னுரை:“மகாத்மா காந்தி” என்று அன்புடன் அழைக்கப்படும் “மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி”, இந்திய விடுதலைப் போராட்டத்தை தலைமையேற்று நடத்திய மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். “விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை” என இந்திய மக்களால் போற்றப்பட்டார். தன்னுடைய வாழ்நாள் முழுவதும் பாரத நாட்டிற்காக அர்பணித்த மாபெரும் மனிதர். இவரைப் பற்றி கட்டுரையில் காண்போம்.

பிறப்பு:மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள் 1869 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இரண்டாம் நாள் இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் எனும் இடத்தில் கரம்சந்த் காந்திக்கும் புத்திலிபாய்க்கும் மகனாய் பிறந்தார். இவருடைய தாய் மொழி குஜராத்தி ஆகும். மேலும் அவருடைய தந்தை கரம்சந்த் காந்தி போர்பந்தரில் திவானாக பணியாற்றி வந்தார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி:மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள் பள்ளியில் படிக்கும்போதே நேர்மையான மாணவனாக விளங்கினார். தன்னுடைய 13 ஆம் வயதிலேயே கஸ்தூரிபாயை திருமணம் செய்துகொண்ட மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், 18 வயதில் பாரிஸ்டர் எனப்படும் வழக்கறிஞர் கல்விக்காக இங்கிலாந்து சென்றார். தன்னுடைய வழக்கறிஞர் கல்வியை வெற்றிகரமாக முடித்து பாரதம் திரும்பிய காந்தி, பம்பாயில் சிறிது காலம் வழக்கறிஞராகப் பணியாற்றினார். 

இந்திய விடுதலைப் போராட்டதில் ஈடுபடக் காரணம்:பம்பை மற்றும் ராஜ்கோட்டில் சிறிது காலம் பணியாற்றிய மகாத்மா காந்தி, ஒரு இந்திய நிறுவனத்தின் உதவியால் தென்னாப்பிரிக்காவில் பணிபுரிய பயணமானார். 1906 ஆம் ஆண்டு ஜோகனஸ்பர்க் என்ற இடத்தில் அஹிம்சை வழியில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு கைது செய்யப்பட்டு சிறை சென்றார். இவ்வாறு அகிம்சை வழியில் தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்திய மக்களின் பிரச்சனையில் வெற்றி பெற்ற மகாத்மா காந்தி, இந்தியா திரும்பியதும் கோபால கிருஷ்ண கோகலே மற்றும் ரவீந்திரநாத் தாகூர் போன்ற பெரும் அரசியல் தலைவர்களின் நட்பு ஏற்பட காரணமாக அமைந்தது.

இந்திய விடுதலை போராட்டத்தில் காந்தியின் பங்கு:இந்திய விடுதலை இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல 1885 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார். ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக தன்னை ஈடுபடுத்திக் கொண்ட மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், 1921ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இளைய தலைமுறை மற்றும் தேசியவாதிகள் இடையே இந்த இயக்கம் ஒரு பெரும் ஆதரவைப் பெற்றது மட்டுமல்லாமல் ஒத்துழையாமை இயக்கத்தின் வெற்றியால் காந்தி இந்திய தேசிய காங்கிரஸின் தனிப்பெரும் தலைவராக உருவெடுத்தார். பின்னர் 1922 ல் உத்திரபிரதேசத்தில் சௌரி சௌரா என்ற இடத்தில் நடந்த நிகழ்வினால் இவ்வியக்கம் கைவிடப்பட்டது. 

காந்தியின் தண்டி யாத்திரை:1930ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு உப்புக்கு வரி விதித்தது. ஆனால், இதனை ஏற்க மறுத்த காந்தியடிகள் தன்னுடைய நாட்டில் விளைந்த பொருளுக்கு அந்நியர் வரி விதிப்பதா? என்று கருதி சத்தியாகிரக முறையில் இதை எதிர்க்க முடிவு செய்து, 1931 மார்ச் 2-ஆம் தேதி, அகமதாபாத்தில் இருந்து சுமார் 240 மைல் தூரத்தில் இருந்த தண்டி நோக்கி நடைபயணம் மேற்கொண்டார். இறுதியில் இருபத்தி மூன்று நாள் பயணத்திற்குப் பிறகு தன்னை வந்தடைந்த அவர் அங்கிருந்த கடல் நீரில் உப்பு காய்ச்சி ஆங்கில சட்டத்திற்கு எதிராக அதனை விநியோகித்தார். இந்த நிகழ்வு இந்தியாவில் பல இடங்களில் பரவியது. போராட்டம் தீவிரம் அடைந்து காந்தி உட்பட பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால் போராட்டம் தீவிரம் அடைவதைக் கண்ட ஆங்கில அரசு வேறு வழியில்லாமல் காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்கள் விதித்த உப்பு வரியை திரும்பப் பெற்றுக் கொண்டனர். உப்பு சத்தியாகிரகம் என்ற இந்த நிகழ்வில் இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது என்று கூறலாம்.

வெள்ளையனே வெளியேறு இயக்கம்:1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி ஆங்கில அரசுக்கு எதிராக ஆகஸ்ட் புரட்சி என்று அழைக்கப்படும் ்வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை காந்தி தொடங்கி வைத்தார். காந்தியின் மன உறுதியையும் அகிம்சை பலத்தையும் கண்ட ஆங்கில அரசு திகைத்தது. இறுதியில் காந்தியின் இடைவிடாத போராட்டத்தால் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்திய சுதந்திரப் பிரகடனம் அரங்கேறியது. ஆனால் இந்தியா பாகிஸ்தான் பிரிவினை காந்தியை பெரிதும் பாதித்தது. 

முடிவுரை:


” காந்தி பற்றி நினைப்போம்

காந்தி சொன்னதை பின்பற்றுவோம்

காந்தி வெற்றியில் ஒவ்வொரு மனிதனின் வாழ்வு”


பாரத நாட்டிற்காக தன்னுடைய உயிரையும் காணிக்கையாக்கிய மகாத்மாவின் நினைவுகள் எல்லாம் மறக்காமல் நம் நாட்டிற்காக செய்த நல்ல காரியங்களில் நாமும் ஈடுபடலாம்.

கே சத்தியபிரியா

பத்தாம் வகுப்பு

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -