Myindia.sg கவிதைப்போட்டி 2021

ஆறுதல் பரிசு

- Advertisement -

வயிற்றுக்கு சோறிடல் வேண்டும்

பாழ்நிலத்தின் அடர் இருளாய் கிடக்கிறது
கதியற்றவனின் பசி!!
பசியாற்ற நினைப்பவனின் உடலிலோ
ஏழ்மையின் முழு ஆடைகள்!!
பூதலத்தின் மடியில் தூங்கும் பல
உயிர்களுக்கு . . .
தங்கள் இளம்பசியை தீர்க்க கூட இங்கு வழியில்லை!!
திருவோடில் பிற உயிர்களுக்கு பாலூற்றுகிறவன்
பசி மறக்க மருந்து கேட்கிறான்!!
பசி எடுக்க மருந்து கேட்பவன், வயிற்றுக்காக பழத்தை திருடியவனிடம் இருந்து அதை பறித்து மகிழ்கிறான்!!
எரியும் தீபத்தை விட அணையும் ஜோதி அதிக ஒளியை நம்முள் பரவ விடுவதைப் போல் . . .
இருப்பவனை விட இல்லாதவன் ஆற்றும் பசி
நம் மனதிற்குள் நிறைகிறது ஒளிச் சந்தியாய்!!
வயிற்றுக்கு சோறிடல் வேண்டும்!!!
வறியவனின் சிவந்த கைகளைக் கண்டு!!

சரஸ் வேல்
சரஸ் வேல்https://minkirukkal.com/author/sarasvel/
என் பெயர் சரஸ் வேல். கணவர் பெயர் வேல்முருகன். 11 ஆண்டுகளாக கணவர், மகள், மற்றும் மகனுடன் சிங்கையில் வசிக்கும் நிரந்தரவாசி. கவிதைகள் என் உணர்வுகளுக்கு வடிகால். அவ்வப்போது முகநூலில் மட்டும் பதிவிட்டு வந்தேன். 2018 ம் ஆண்டிலிருந்து கவிமாலையின் மாதாந்திர போட்டிகளில் பங்கேற்று வருகிறேன். வாசகர் வட்டம், தங்கமீன் கலை இலக்கிய வட்டத்திற்கும் கவிதை எழுதி உள்ளேன். தமிழ் மொழி மாதத்தில், கவிதை சவலான சிங்பொரிமோவிலும் இரண்டு ஆண்டுகளாக பங்கேற்று வருகிறேன். மின்கிறுக்கள் மின்னிதழில் பொங்கல்/சீனப் புத்தாண்டு கவிதைப் போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. மென்மேலும் கவிதைகள் படைத்துக் கொண்டு இருக்க வேண்டும் என்பதே என் மனதின் வேட்கை.

2 COMMENTS

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -