யமுனாவீடு

தொடர் கவிதைகள் - 2

- Advertisement -

யமுனாவின் இயல்பு இந்த வீட்டில் எல்லோரும் அறிந்ததே
எல்லோரும் என்றால்
யமுனாவின் அம்மா
தினமும் வரும் யமுனாவின் தோழி
இரு கைகள் நிறையக் கதைகளை எடுத்துவரும் தோழியின் மகன்
யமுனாவைச் சந்திக்கும் போதெல்லாம் கீச்சென்ற பறவையின் உற்சாகம் தருவாள்
பறவையின் பறந்த திசையெங்கென நானும் தேடிப் பறக்க ஆரம்பித்திருப்பேன்
அந்தநேரம் மகன் இருகைகளை விரித்து யமுனாவிற்கு கடல் கதைகளைச் சொல்லிக்கொண்டிருப்பான்
இரவின் கடல் அலையென ஆழ்ந்திருப்பாள் யமுனா
மறுநாள் அறையெங்கும் பறவைகள் பறந்தலையும்
மீன்கள் நீந்திக்கொண்டிருக்கும்
வலைவீசிய மீனவன் துடுப்பு துறந்து படகில் உறங்கியிருப்பான்
வானம் சூரியனைச் சேர்த்திழுக்கும்
கரிக்கோடிட்ட அறைச்சுவரின் ஓரம் யமுனா உறங்கிய பொழுதை யாரும் அறிவார்
நேற்று கதைகளையும் கேட்ட வீடு
இன்று கதைகளைச் சொல்லும் வீடு
யமுனா வீடு.

பாண்டித்துரை
பாண்டித்துரைhttps://minkirukkal.com/author/pandiidurai/
பெயர் இராஜேந்திரன் நீதிப்பாண்டி. (அப்பா பெயர் இராஜேந்திரன்). சொந்த ஊர் அ.காளாப்பூர் (சிவகங்கை மாவட்டம்) வணிகவியல் இளங்கலை படித்த நான் தற்போது சிங்கப்பூரில் கட்டுமானத்துறையில் கட்டுமான பாதுகாப்பு பிரிவில் மேலாளராக பணிபுறிகிறேன். 2006 முதல் பாண்டித்துரை எனும் பெயரில் எழுதிவருகிறேன். அவநிதாவின் சொல் & மாயா மது உதயா எனும் இரண்டு கவிதை நூல்களை எழுதியிருக்கிறேன். குறும்படம் மீது உள்ள ஆர்வத்தில் நண்பர்களுடன் இணைந்து சில குறும்பட முயற்சிகள் செய்துள்ளேன்.

1 COMMENT

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -