Myindia.sg கவிதைப்போட்டி 2021

மூன்றாம் பரிசு

- Advertisement -

வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்

கோவிலுக்குக் குடமுழுக்கு
கொற்றவைக்குப் பட்டுடுப்பு
பிறப்பையும் இறப்பையும்
பிணைத்திடும் வாழ்வின்
பல நிலைகளிலும் வளமேற்றிட
ஆசைத்தீயில் ஆயிரம் வேள்விகள்..
இன்னார் இன்னார் இதனை
ஆண்டவனுக்குச் செய்ததாகப்
பெயர் பொறிப்பு..
முற்பகல் செய்த தீவினை
அடர்வுகள் குறைத்து அழிக்க
பிற்பகல் கோவிலில் இறைமுன்
விதவிதமாய் விருந்தளித்துப்
படைத்தவனுக்கே படம்காட்டிப்
பகட்டினைப் பறைசாற்றும்
போலிப்பக்தர்க் கூட்டம்..
பட்டினியில் ஒட்டிய வயிற்றுடன்
கையேந்தி நிற்கிறது அறம்…
அதன் வயிற்றுக்குச் சோறிடுபவனுக்காய்க்
காத்திருக்கிறது இறை.

அ. பிரபா தேவி
அ. பிரபா தேவிhttps://minkirukkal.com/author/prabhadevi/
தன் சீரிய தமிழாலும் கவிதைகளாலும் பலர் மனம் வென்ற கவிஞர். தேர்ந்த படிப்பாளி. நெல்லையைச் சொந்த ஊராகக் கொண்ட இவர் பாடல்கள் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். கதைகள் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்.

1 COMMENT

  1. தொடர்ந்து மிகச்சிறந்த கவிதைகளாலும் கட்டுரைகளாலும் மக்கள் மனதில் இடம்பிடித்த கவிதாயினி பிரபாதேவி அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்..

    உங்கள் வழிநெடுகிலும் வசந்தகால பூக்கள் பூக்கட்டும்.. ☺️??

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -