பெருநகர் கனவுகள் – 3

ஒரு குடுவைக்குள்

- Advertisement -

ஒரு குடுவைக்குள்

ஒரே குடுவைக்குள்
அனைத்தும்
நிகழ்கின்றன.

தகற இடுக்குகளில் காத்திருந்து
காலையில் வந்துவிழும்
நேற்றைய மழைத்துளிகள்.

நிராதரவாய் முற்சந்தியில்
நிற்கும் ஒற்றை மரங்களின்
கண்டுகொள்ளப்படாத
உதிர்ந்த இலைகள்.

மின்சாரக் கம்பியில்
வந்தமர்ந்து
பரபரப்பைக் கண்காணித்துவிட்டு
பறந்தோடும் பறவைகள்.

இல்லாத தன் கையால்
போவோரிடம்
கெஞ்சியபடி நிற்கும்
சீனக்கிழவன்.

எல்லாவற்றையும்
கவனித்தபடியும்
கவனிக்காதபடியும்
கடந்து சுழலும்
நீ;நான்;அவர்கள்.

இங்கு
எல்லாமும்
ஒன்றுபோலவே
நிகழ்கின்றன.

ஒரு குடுவைக்குள்
கலந்து கரைந்து
போதையாகின்றோம்.

கே.பாலமுருகன்
கே.பாலமுருகன்https://minkirukkal.com/author/kbalamurugan/
மலேசிய எழுத்தாளர், தமிழாசிரியராகப் பணியாற்றி வருகிறார். இதுவரை இலக்கியம் சார்ந்து 15 நூல்களும், கல்வி ஆய்வியல் சார்ந்து 18 நூல்களும் இயற்றியுள்ளார். தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் இலக்கியத்திற்கான கரிகாற் சோழன் விருது, அன்னை வேளாங்கன்னி கலைக் கல்லூரியின் தனி நாயகர் தமிழ் நாயகர் விருது, குறிஞ்சி கபிலர் இயக்கத்தின் பாரதி விருது, மலேசியப் பல்கலைக்கழகத்தின் எம்.ஏ.இளஞ்செல்வன் விருது, சி.கமலநாதன் விருது, குடியரசு தின விருது என இலக்கியத்திலும் கலை படைப்புகளிலும் இதுவரை 25 சர்வதேச விருதுகள் பெற்றுள்ளார். மலேசியாவில் பலகலைக்கழக, கல்லூரி மாணவர்களுக்கான சிறுகதைப் பயிற்றுநராக வெண்பலகை எனும் திட்டத்தில் செயலாற்றி வருகிறார். அதோடுமட்டுமல்லாமல் சிறுவர் நாவல்கள், சிறுவர் சிறுகதைகள், சிறுவர்களுக்கான படைப்பிலக்கியத் தளங்களை உருவாக்கி அடுத்த தலைமுறை மாணவர்களுக்கும் வழிகாட்டி வருகிறார். http://balamurugan.org என்கிற தன் அகப்பக்கத்தில் எழுதியும் வருகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -