பெருநகர் கனவுகள் – 20

பெருநகர் கனவுகள்

- Advertisement -

வானொலி நிலையம்

இங்கு
இறந்தவர்களின்
பெயர்கள் மட்டுமே
ஒலிப்பரப்பப்படும்.

இறந்தவர்கள்
சண்டைக்கு வரமாட்டார்கள்.

இறந்தவர்கள்
பங்குரிமை கேட்டு
வரமாட்டார்கள்.

இறந்தவர்கள்
தமக்கு மேலும்
புகழ் வேண்டுமென
அடம் பிடிக்கமாட்டார்கள்.

இறந்தவர்கள்
மீண்டும் இறக்கப் போவதாக
மிரட்ட மாட்டார்கள்.

இறந்தவர்கள்
போதவில்லை எனப்
புகாரளிக்க மாட்டார்கள்.

யாரும் கேட்கப் போவதில்லை
எனத் தெரிந்தும்
வானொலி நிலையம்
செயல்படும்.

கே.பாலமுருகன்
கே.பாலமுருகன்https://minkirukkal.com/author/kbalamurugan/
மலேசிய எழுத்தாளர், தமிழாசிரியராகப் பணியாற்றி வருகிறார். இதுவரை இலக்கியம் சார்ந்து 15 நூல்களும், கல்வி ஆய்வியல் சார்ந்து 18 நூல்களும் இயற்றியுள்ளார். தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் இலக்கியத்திற்கான கரிகாற் சோழன் விருது, அன்னை வேளாங்கன்னி கலைக் கல்லூரியின் தனி நாயகர் தமிழ் நாயகர் விருது, குறிஞ்சி கபிலர் இயக்கத்தின் பாரதி விருது, மலேசியப் பல்கலைக்கழகத்தின் எம்.ஏ.இளஞ்செல்வன் விருது, சி.கமலநாதன் விருது, குடியரசு தின விருது என இலக்கியத்திலும் கலை படைப்புகளிலும் இதுவரை 25 சர்வதேச விருதுகள் பெற்றுள்ளார். மலேசியாவில் பலகலைக்கழக, கல்லூரி மாணவர்களுக்கான சிறுகதைப் பயிற்றுநராக வெண்பலகை எனும் திட்டத்தில் செயலாற்றி வருகிறார். அதோடுமட்டுமல்லாமல் சிறுவர் நாவல்கள், சிறுவர் சிறுகதைகள், சிறுவர்களுக்கான படைப்பிலக்கியத் தளங்களை உருவாக்கி அடுத்த தலைமுறை மாணவர்களுக்கும் வழிகாட்டி வருகிறார். http://balamurugan.org என்கிற தன் அகப்பக்கத்தில் எழுதியும் வருகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -