தலைவி

கவிதை

- Advertisement -

வெண்மை சூழ்ந்த இதயம்
பிணைந்த நேசமது இரு உயிர்கள்
உறைந்த நொடியில் மடிந்திடுமோ…!

நிறைவேறாத ஆசையுடனும் கேள்வி
இல்லா வினாக்களுடன் மாயமாய்
சுழற்றும் காலத்தின் பிடியில் மறைகின்றேன்…!

வெறுமை புடை சூழ ஆழிப் பேரலையில்
சிதறிய வெற்று இதயத்தில் விசும்பும் சிந்தையுடன்
விடிகிறது என் பொழுது….!

உன் பிறவியின் அற்புதம் அறிய
ஆவலாய் அலைந்து
மானிடனைக் கடந்த இறைவனின் செதுக்கலென
அறிந்து மௌனித்தேன்…!

நேசப் பார்வை படாத மேனி தீயில்
பட்ட புழுவாய் துடிதுடித்துக் கருகி
ஈரப் பார்வைக்காகத் தவமிருக்கின்றதே…!

ஆசுவாசப்படுத்திய நிஜங்கள் திகட்டும் நினைவுகள்
மரணம் வரைக்கும் என்பதை
கடந்து சுவனம் வரை இதய அறையில்
ஓயாமல் ஒலித்திடுவேன் தலைவி…!

புல்மோட்டை கவி நவீத்
புல்மோட்டை கவி நவீத்https://minkirukkal.com/author/muhammathunaveeth/
திருகோணமலை மாவட்டத்தில் புல்மோட்டை எனும் அழகிய கிராமத்தில் நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்தேன் எழுத்துக்களின் மேல் உள்ள ஆர்வத்தினால் கவரப்பட்டு பல்வேறு விதமான ஆக்கங்கள் எழுத ஆரம்பித்தேன் ஈரம் காயாத எழுத்துக்கள் எனும் புத்தகம் தற்போது எழுதி வருகின்றேன் சில நாட்களில் வெளியிடப்படும். இலங்கை சமுத்திரவியல் பல்கலைக்கழகத்தில் நீருயிரின கைத்தொழில் நீர்வள முகாமைத்துவம் முதலாவது ஆண்டின் கல்வி கற்கின்றேன்

1 COMMENT

  1. எழுத்துலகில் இன்னும் இன்னும் வளர வாழ்த்துக்கள்

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -