சகடக் கவிதைகள் – 17

தொலைந்த சாவிகள்….

- Advertisement -

தொலைந்த சாவிகள்….

தோன்றுவதும் மறைவதும்
இருப்பதும் மாறுவதுமாய்
சுற்றிச் சுழன்றபடி ஒரு
சோர்விலா விளையாட்டு

ஒன்றைப் போல் ஒன்றில்லை – ஆனாலும்
ஒவ்வொன்றும் வேறு வேறுமில்லை

நாடகம் முடிந்தபின்
நாயகனும் நயவஞ்சகனும்
நண்பர்கள்தான் என்றால்
நம்பத்தான் முடியாமோ ?
நடிக்கும் தருணம்

அரிதாரம் கலைந்தபின் – என்றும்
அன்பு மட்டுமே எஞ்சும் – அதன்முன்
அண்டம் பெரிதாகத் தோன்றினும்
அளவிடத் தராசிருப்பின்
அஞ்சித் தயங்கி நிற்கும்
அடிபணிந்து தோல்வி ஏற்கும்

கடல் சேரும் நீரதிலே
குட்டையென்ன குளமென்ன
உடல் பலவாய்த் தோன்றினும்
உய்யும் நிலையில் பகையென்ன?

தேடல் ஒன்றே வழியாம் – உள்ளே
தேர்ந்த ஒளி தோன்றும்
தேன் தேடிப் போகாது
தேனியைத் தேடி என்றும்

நேற்றைய பதில்களுக்கும்
நாளைய கேள்விகளுக்கும் – நடுவே
நில்லாத போக்குவரத்தால்
இல்லாது போன இன்றின்
இருட்டைக் கிழித்துப் பார்ப்பின் – அவ்
இடைவெளியில் சஞ்சலமின்றி
இளைப்பாறுகிறதாம்
இப் பிரபஞ்சத்தின் கொத்துச்சாவி….

இந்த கவிதைத் தொகுப்பின் முந்தைய பகுதிகளைப் படிக்க இங்கே சொடுக்கவும்

ராகவ் மிர்தாத்
ராகவ் மிர்தாத்http://www.rakavmirdath.com
மனித உளவியலையே மாற்றக்கூடிய சக்தி படைத்த சினிமாவில் தானும் ஒரு தவிர்க்க முடியாத பங்காற்ற வேண்டுமென்ற தணியாத கலைத்தாகத்தால் உந்தப்பட்ட படைப்பாளி, இயக்குனர், எழுத்தாளர்.இவரது படைப்புகள் வெகுவிரைவில் வெள்ளித்திரையில் காணக்கிடைக்கும் என்பதில் மகிழ்ச்சி.தேசிய விருது பெற்ற “பாரம்" படத்தின் திரைக்கதை மற்றும் வசனகர்த்தா.இவருடைய “மிருணா” என்கிற குறும்படம் ரீகல்டாக்கீஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -