இனியொரு முறை
வாராது
உயிரொழுகிய தருணமொன்றை
உடனிருந்து பார்த்தது
‘வீட்டுக்கு எடுத்துக்கிட்டுப்
போய்டுங்க’
மருத்துவர் கைவிரிக்க
தாத்தாவை அழைத்து வந்து
கட்டிலில் படுக்க வைத்தோம்
எடுத்த விடுப்பு
முடிந்து போக
முகம் பார்த்துக்
கிளம்புகையில்
களுக் எனவே
தூக்கிப்போட
தலைசரிய
உடலடங்க
காற்றடைத்தப் பையிலிருந்து
பறவையொன்று மேலேரும்
யாருமறியா கூட்டுக்கு
உயிரொழுகிய தருணம்
கவிதை