யமுனாவீடு -87

தொடர் கவிதை

- Advertisement -

நெகிழும் தன்மையையில்
கண்முன்னே நிற்கிறேன்
துல்லியமான மரணம் வரும்
தாங்கிக்கொள்ளும் முன்பாக
வயல்களைக் கடந்த பயணம் வேண்டும்

ஒரு முத்தத்தை
பெறுவதில் ஆரம்பித்து
எல்லாவற்றிலிருந்தும் வெளியேறவேண்டும்
நீண்டதொரு யாத்திரைக்கு
வாழ்விடம் தேவையில்லை

அப்பழுக்கற்ற
வளர்ந்த மழலையின் முகம்
இங்கு யாருக்குமில்லை
நாம் இருப்பதைத் தேடுவதில்லை
இதயத்தைத் துடிக்கவிட்டு
நிசப்தமாவே இரு

தனியனாய் காணாமல்
போய்விடச்சொல்லிக்
கணங்கள்தோறும் துடித்துக்கொண்டிருப்பதை
நீயேனும் அறிவாயா யமுனா

ஏதார்த்தம் எதைப்போன்றதோ
அதைப்போன்றதுதான் எல்லாமும்
நாம் கண்டுணர்வதில்லை
தேவதூதுவர்களும் வருவதில்லை
இதுவும் கடந்துபோக
யமுனா நீ விட்டுப்போவதில்லை

ஏதாவது புரிகிறதா யமுனா…

பாண்டித்துரை
பாண்டித்துரைhttps://minkirukkal.com/author/pandiidurai/
பெயர் இராஜேந்திரன் நீதிப்பாண்டி. (அப்பா பெயர் இராஜேந்திரன்). சொந்த ஊர் அ.காளாப்பூர் (சிவகங்கை மாவட்டம்) வணிகவியல் இளங்கலை படித்த நான் தற்போது சிங்கப்பூரில் கட்டுமானத்துறையில் கட்டுமான பாதுகாப்பு பிரிவில் மேலாளராக பணிபுறிகிறேன். 2006 முதல் பாண்டித்துரை எனும் பெயரில் எழுதிவருகிறேன். அவநிதாவின் சொல் & மாயா மது உதயா எனும் இரண்டு கவிதை நூல்களை எழுதியிருக்கிறேன். குறும்படம் மீது உள்ள ஆர்வத்தில் நண்பர்களுடன் இணைந்து சில குறும்பட முயற்சிகள் செய்துள்ளேன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -