என் வானிலே

கவிதை

- Advertisement -

என் வானம் அமாவாசை இருளால்
பரவிக் கிடக்கும்போது
ஒரேயொரு முத்தத்தால்
எண்ணிலடங்கா
மின்மினிப் பூச்சிகளைப் பறக்கவிடுறாள்
என் சின்னக் கண்மணி!


கவிதைக்காக மெனக்கிட்டு ஏணியிலேறி
பரணில் வார்தைகள் தேட எத்தனிதேன்.
வண்ணக் கலவையினுள் பாதம் பதித்து
தரையில் ஓடி விளையாட விளித்தாள்
என் சின்னக் கண்மணி.
மூச்சிரைக்கத் துரத்தியதில்
அயர்ந்த பிஞ்சுப் பாதங்கள்
இளைப்பாறின ஓவியமாய்.
இப்போது தரையில் கிடப்பவை
வார்த்தைகளாகி
தத்தித்தத்தி வந்து
காகிதத்திலேறி
கவிதையாய் மிளிர்கிறது!

தேன்மொழி அசோக்
தேன்மொழி அசோக்https://minkirukkal.com/author/thenmozhi/
கவிமாலை,தங்கமீன் கலை இலக்கிய வட்டம் ஆகிய அமைப்புகளில் கவிதைகள் எழுதி வருகிறார். மின்னணுவியல் மற்றும் தொலைதொடர்பியலில் பொறியியல் பட்டம் பெற்று இரண்டு வருடங்கள் மென்பொருள் துறையில் பணியாற்றிய அனுபவம் உள்ளது.இவரது கவிதைகள் தமிழ் முரசு நாளிதழிலும்,கட்டுரைகள் தேக்கா எக்ஸ்பிரஸ் இணைய இதழிலும் வெளியாகியுள்ளன. கற்பனை சிறகை விரித்துப் பறக்க, கவிதைகள் பக்கபலமாய் இருப்பதாக நினைக்கிறார்..கவிதைகளோடு பழகி இன்னும் நெருக்கமாக விரும்புகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -