யமுனா வீடு – 33

தொடர் கவிதைகள்

- Advertisement -

இந்தப்பொழுது
அழகானதாக தொடங்குகிறது
வண்ணங்களைக் குழைத்த உடை அணிந்த மனிதர்களைப்
பரந்த வெளியெங்கும் காண்கிறாள் யமுனா
அன்றாடமும் இப்படித்தான்
வண்ண மனிதர்களைப் பார்த்து
வெறுமையைத்
துரத்தப்பழகியவள்
அவளுக்கான உலகத்தில்
உரையாடுகிறாள் பார்க்கும் ஓரிருவர்
எப்போதாவது வரும் அலைபேசி அழைப்பு
சுற்றித்திரியும் பறவை, விலங்கு
தனித்திருக்கும் தனக்குள்ளுமென
அமைதியடைகிறாள்
முகம் மலர்ந்து பணிசெய்தல்
அவள் சொல்லும் வார்த்தைகள்
உள்ளார்ந்து புலப்படும் ஒளியினைக் கண்டுகொண்டு
எல்லாப் பக்கங்களிலும் அன்பொன்றைப் போதிப்பவளுக்கான காலம் வெகு தொலைவிலுள்ளது
இப்போதுதானே நடக்க ஆரம்பித்திருக்கிறாள்
சென்றடையும் பொழுதில்
நம்மில் ஒருவர் வரவேற்கும் முகமாய் அங்கிருப்போம்

பாண்டித்துரை
பாண்டித்துரைhttps://minkirukkal.com/author/pandiidurai/
பெயர் இராஜேந்திரன் நீதிப்பாண்டி. (அப்பா பெயர் இராஜேந்திரன்). சொந்த ஊர் அ.காளாப்பூர் (சிவகங்கை மாவட்டம்) வணிகவியல் இளங்கலை படித்த நான் தற்போது சிங்கப்பூரில் கட்டுமானத்துறையில் கட்டுமான பாதுகாப்பு பிரிவில் மேலாளராக பணிபுறிகிறேன். 2006 முதல் பாண்டித்துரை எனும் பெயரில் எழுதிவருகிறேன். அவநிதாவின் சொல் & மாயா மது உதயா எனும் இரண்டு கவிதை நூல்களை எழுதியிருக்கிறேன். குறும்படம் மீது உள்ள ஆர்வத்தில் நண்பர்களுடன் இணைந்து சில குறும்பட முயற்சிகள் செய்துள்ளேன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -