சுடர்முகம்

கவிதை

- Advertisement -

கண்ணுக்கு அழகிய கைக்குழந்தையை
கையில் அள்ளிஅணைத்து
கண்மணியே! தேவதையே! எனக் கொஞ்சி
செல்லம்மாள் என்ற நாமத்தோடு
அன்பாலே நெய்த சுடர்முகத்தாளே!
மகாலட்சுமியின் வடிவமாய்
வளம் வந்த திருமுகத்தாளே!
பள்ளிப்பருவத்தைக் கடந்து
கல்லூரியில் பூத்தவளே!
எவர் தான் அறிந்தாரோ?
செம்மேனி அது கருகுவதை
எவன்தான் சிதைத்தானோ?
சுடர்முகத்தாளை…..
தீயினும் கொடிய அமில வீச்சாலே!!

தேன்மொழி அசோக்
தேன்மொழி அசோக்https://minkirukkal.com/author/thenmozhi/
கவிமாலை,தங்கமீன் கலை இலக்கிய வட்டம் ஆகிய அமைப்புகளில் கவிதைகள் எழுதி வருகிறார். மின்னணுவியல் மற்றும் தொலைதொடர்பியலில் பொறியியல் பட்டம் பெற்று இரண்டு வருடங்கள் மென்பொருள் துறையில் பணியாற்றிய அனுபவம் உள்ளது.இவரது கவிதைகள் தமிழ் முரசு நாளிதழிலும்,கட்டுரைகள் தேக்கா எக்ஸ்பிரஸ் இணைய இதழிலும் வெளியாகியுள்ளன. கற்பனை சிறகை விரித்துப் பறக்க, கவிதைகள் பக்கபலமாய் இருப்பதாக நினைக்கிறார்..கவிதைகளோடு பழகி இன்னும் நெருக்கமாக விரும்புகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -