யமுனா வீடு – 18

தொடர் கவிதை - 18

- Advertisement -

எந்த ஒரு புள்ளியின் துவக்கமோ
முடிவும் அந்தப்புள்ளிதான்
யமுனா அறிவாள்

ஒரு சந்திப்புதான் தீர்மானிக்கிறது
பிறகான நிகழ்வுகளை
குழந்தைக்கு முத்தமிடுதலைப்போல
நிகழ்ந்துவிடுகிறது அது

அழுத்திவைத்திருக்கும் அன்புப்பொதியை
யாரோ ஒருவரிடத்தில் அவிழ்க்கவே வேண்டியிருக்கு
சிறிய நம்பிக்கைதான் அது

எப்போதுமான பணி
எப்போதுமான பயணம்
எப்போதுமான கனவு
எப்போதுமான வாழ்க்கையில்
எப்போதாவதுதான் யமுனா வெளிப்படுகிறாள்
கரைதொடும் கடலலையப்போல
யமுனாவின் பேரன்புகொண்டு

பாண்டித்துரை
பாண்டித்துரைhttps://minkirukkal.com/author/pandiidurai/
பெயர் இராஜேந்திரன் நீதிப்பாண்டி. (அப்பா பெயர் இராஜேந்திரன்). சொந்த ஊர் அ.காளாப்பூர் (சிவகங்கை மாவட்டம்) வணிகவியல் இளங்கலை படித்த நான் தற்போது சிங்கப்பூரில் கட்டுமானத்துறையில் கட்டுமான பாதுகாப்பு பிரிவில் மேலாளராக பணிபுறிகிறேன். 2006 முதல் பாண்டித்துரை எனும் பெயரில் எழுதிவருகிறேன். அவநிதாவின் சொல் & மாயா மது உதயா எனும் இரண்டு கவிதை நூல்களை எழுதியிருக்கிறேன். குறும்படம் மீது உள்ள ஆர்வத்தில் நண்பர்களுடன் இணைந்து சில குறும்பட முயற்சிகள் செய்துள்ளேன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -