யமுனா வீடு

தொடர் கவிதை - 10

- Advertisement -

ஒரு நெடியநாளின் சிறுதுயரை
கடந்து வருவதில்
யாரிடம் கதை கேட்டு
யாரிடம் கதை சொல்வது
என்ற குழப்பத்தில்
அழத்தொடங்கும் யமுனாவிற்கு
சமாதானம் தேவைப்படுகிறது
அம்மாச்சியின் முகம் பார்க்கிறாள்
அப்பாவின் முகம் பார்க்கிறாள்
அம்மாவின் முகம் பார்க்கிறாள்
சமாதானத்திற்கான புன்முறுவலை
யார் தருகிறார்களோ
அவர்களைப் பற்றிக்கொண்டு
சமாதானம் அடைகிறாள்
சமாதானம் அடையும் யமுனாவிற்கு
ஒரு நெடியநாள் இன்றோடு முடியாது
நாளைய பொழுதில் ஆரம்பமாகும் – என்று
தெரிந்தே இருக்கிறது.

பாண்டித்துரை
பாண்டித்துரைhttps://minkirukkal.com/author/pandiidurai/
பெயர் இராஜேந்திரன் நீதிப்பாண்டி. (அப்பா பெயர் இராஜேந்திரன்). சொந்த ஊர் அ.காளாப்பூர் (சிவகங்கை மாவட்டம்) வணிகவியல் இளங்கலை படித்த நான் தற்போது சிங்கப்பூரில் கட்டுமானத்துறையில் கட்டுமான பாதுகாப்பு பிரிவில் மேலாளராக பணிபுறிகிறேன். 2006 முதல் பாண்டித்துரை எனும் பெயரில் எழுதிவருகிறேன். அவநிதாவின் சொல் & மாயா மது உதயா எனும் இரண்டு கவிதை நூல்களை எழுதியிருக்கிறேன். குறும்படம் மீது உள்ள ஆர்வத்தில் நண்பர்களுடன் இணைந்து சில குறும்பட முயற்சிகள் செய்துள்ளேன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -