பெருநகர் கனவுகள் – 10

சுவர் ஓவியங்கள்

- Advertisement -

சுவர் ஓவியங்கள்

வரைந்து முடிக்கப்படாத
சுவரோவியங்களின்
ஒழுங்கற்ற கோடுகளைக்
கவனித்துக் கொண்டிருக்கிறது
வெளிச்சம் மங்கிய
சாலை விளக்கு.

கிளையென நினைத்து
வந்தமர்ந்த
பறவையின் கோணலை உணராது
அசைவுற்று நின்றிருந்தது
மாயமரம்.

ஆளரவமற்றுப்போன
காலிச்சுவர்களில்
நிழல்கள் சாய்த்துக்கிடந்தன
எப்பொழுதோ வரையப்பட்டு
ஆயுள் முடிந்துபோன
வழிபோக்கர்களின் ஓவியங்கள்.

தூரத்தில் பார்க்கும்
சன்னாசி கிழவனின் கண்களில்
முழுமையடையாத ஓவியங்களின்
கூட்டுச்சதியாய்
விரிகிறது இரவு.

-கே.பாலமுருகன்

கே.பாலமுருகன்
கே.பாலமுருகன்https://minkirukkal.com/author/kbalamurugan/
மலேசிய எழுத்தாளர், தமிழாசிரியராகப் பணியாற்றி வருகிறார். இதுவரை இலக்கியம் சார்ந்து 15 நூல்களும், கல்வி ஆய்வியல் சார்ந்து 18 நூல்களும் இயற்றியுள்ளார். தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் இலக்கியத்திற்கான கரிகாற் சோழன் விருது, அன்னை வேளாங்கன்னி கலைக் கல்லூரியின் தனி நாயகர் தமிழ் நாயகர் விருது, குறிஞ்சி கபிலர் இயக்கத்தின் பாரதி விருது, மலேசியப் பல்கலைக்கழகத்தின் எம்.ஏ.இளஞ்செல்வன் விருது, சி.கமலநாதன் விருது, குடியரசு தின விருது என இலக்கியத்திலும் கலை படைப்புகளிலும் இதுவரை 25 சர்வதேச விருதுகள் பெற்றுள்ளார். மலேசியாவில் பலகலைக்கழக, கல்லூரி மாணவர்களுக்கான சிறுகதைப் பயிற்றுநராக வெண்பலகை எனும் திட்டத்தில் செயலாற்றி வருகிறார். அதோடுமட்டுமல்லாமல் சிறுவர் நாவல்கள், சிறுவர் சிறுகதைகள், சிறுவர்களுக்கான படைப்பிலக்கியத் தளங்களை உருவாக்கி அடுத்த தலைமுறை மாணவர்களுக்கும் வழிகாட்டி வருகிறார். http://balamurugan.org என்கிற தன் அகப்பக்கத்தில் எழுதியும் வருகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -