யமுனா வீடு 55

தொடர் கவிதைகள்

- Advertisement -

தூக்கமிழந்த இரவுகளில்
பரிச்சியமானவர்கள்
யாரவது இருக்கிறார்களா
தேடத்தொடங்கிவிடுகிறேன்

எதுபற்றியும் சிந்தனையில்லாமல்
நகரத்தின் வெளிச்சத்தில்
பாதங்கள் நடக்கத்தொடங்குவதை
நிறுத்தமுடியவில்லை

விடியக்காத்திருக்கும்
வானம் பார்த்தவனாக
ஆறாத காயத்தோடு
பொறுமையற்று
திரும்பவருகிறேன்

எனக்கு நானே பேசிக்கொண்டு
எனக்கு நானே அழுதுகொண்டு
எனக்கு நானே சிரித்துக்கொண்டு

பிணியுற்றவனின்
இந்தப்பொழுதில் – யமுனா
பூரணத்துவமாக நீ இருப்பதாலே
பாதுகாப்புடன்
பெருவிரைவுச்சாலையில்
விரைந்துசெல்கிறேன்

பாண்டித்துரை
பாண்டித்துரைhttps://minkirukkal.com/author/pandiidurai/
பெயர் இராஜேந்திரன் நீதிப்பாண்டி. (அப்பா பெயர் இராஜேந்திரன்). சொந்த ஊர் அ.காளாப்பூர் (சிவகங்கை மாவட்டம்) வணிகவியல் இளங்கலை படித்த நான் தற்போது சிங்கப்பூரில் கட்டுமானத்துறையில் கட்டுமான பாதுகாப்பு பிரிவில் மேலாளராக பணிபுறிகிறேன். 2006 முதல் பாண்டித்துரை எனும் பெயரில் எழுதிவருகிறேன். அவநிதாவின் சொல் & மாயா மது உதயா எனும் இரண்டு கவிதை நூல்களை எழுதியிருக்கிறேன். குறும்படம் மீது உள்ள ஆர்வத்தில் நண்பர்களுடன் இணைந்து சில குறும்பட முயற்சிகள் செய்துள்ளேன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -