மரித்த காதல் 

கவிதை

- Advertisement -

இரவின் மடியில் ஈர் உடலும்
ஓருயிருமாய் தாலாட்டிக் கதை
பேசி மடி தூங்கிய நினைவுகள்
சிந்தையை சிதைத்துச் செல்ல
விழிகளும் மௌனமாய் அழுகின்றதே….!

ஊமையானவனை பாடவைத்து தனிமையில் செத்துப் பிழைத்தவனை
கட்டியணைத்த அவள் காற்றில்
கரைந்து போன நாள் முதல்
அடியற்ற தனிமரமாய் அசைகிறேன்…..!

கோர்த்த கைகளும் விலகிப் போக
தாங்கிய தோள்களும் தனித்து விட
நிமிடங்களும் எதிரியாய் மாறி
காயப்படுத்த வாழ்க்கையும்
நரகமாகி நகர்ந்தது…..!

தீ மேல் புழு போல் தினம் உடல்
கருக அவள் நினைவில் இதயமும்
கனக்க பால் நிலவும் என் தனிமையை
பார்த்து எள்ளி நகைக்கின்றது….!

பாசம் வைத்தது பாவமா ?
பாசமே வேசமா ? சுட்டெரிக்கும்
நினைவுகள் தான் உண்மைக்
காதலின் பரிசா ? விடையறியேனாகி
திகைக்கின்றேன்…..!

புல்மோட்டை கவி நவீத்
புல்மோட்டை கவி நவீத்https://minkirukkal.com/author/muhammathunaveeth/
திருகோணமலை மாவட்டத்தில் புல்மோட்டை எனும் அழகிய கிராமத்தில் நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்தேன் எழுத்துக்களின் மேல் உள்ள ஆர்வத்தினால் கவரப்பட்டு பல்வேறு விதமான ஆக்கங்கள் எழுத ஆரம்பித்தேன் ஈரம் காயாத எழுத்துக்கள் எனும் புத்தகம் தற்போது எழுதி வருகின்றேன் சில நாட்களில் வெளியிடப்படும். இலங்கை சமுத்திரவியல் பல்கலைக்கழகத்தில் நீருயிரின கைத்தொழில் நீர்வள முகாமைத்துவம் முதலாவது ஆண்டின் கல்வி கற்கின்றேன்

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -