பெருநகர் கனவுகள் – 7

கவிதை தயாரிப்பவன்

- Advertisement -

கவிதை தயாரிப்பவன்

கவிதை தயாரிப்பவனைவிட
அவனுக்கு வாய்க்கும்
கணங்கள் அபூர்வமானவை.

கூர்ந்து கேட்கும்
அவனது செவிகளில்
இரைச்சல்களைவிட
சிலரது மௌனங்களே
கேட்டுவிடுகின்றன.

அலைந்து திரியும்
அவனது பார்வைகளுள்
வெளிச்சத்தைவிட
இருள் பூசிய முகங்களே
தெரிந்துவிடுகின்றன.

கவிதை தயாரிப்பவனின்
கவிதைகளைவிட
அவனது அனுமானங்கள்
அச்சுறுத்துகின்றன.

கவிதை தயாரிப்பவனின்
கவிதைக்குள்ளிருந்து
கேட்கும் குரல்கள்
அலறுகின்றன.

கவிதை தயாரிப்பவன்
பலமுறை கொன்றொழித்த
சம்பவங்கள்
காட்சிகள்
மனிதர்கள்
தருணங்கள்
என அனைத்திற்கும்
அவனே ஒரு கடவுள் போல
நின்றிருந்தான்.

கே.பாலமுருகன்
கே.பாலமுருகன்https://minkirukkal.com/author/kbalamurugan/
மலேசிய எழுத்தாளர், தமிழாசிரியராகப் பணியாற்றி வருகிறார். இதுவரை இலக்கியம் சார்ந்து 15 நூல்களும், கல்வி ஆய்வியல் சார்ந்து 18 நூல்களும் இயற்றியுள்ளார். தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் இலக்கியத்திற்கான கரிகாற் சோழன் விருது, அன்னை வேளாங்கன்னி கலைக் கல்லூரியின் தனி நாயகர் தமிழ் நாயகர் விருது, குறிஞ்சி கபிலர் இயக்கத்தின் பாரதி விருது, மலேசியப் பல்கலைக்கழகத்தின் எம்.ஏ.இளஞ்செல்வன் விருது, சி.கமலநாதன் விருது, குடியரசு தின விருது என இலக்கியத்திலும் கலை படைப்புகளிலும் இதுவரை 25 சர்வதேச விருதுகள் பெற்றுள்ளார். மலேசியாவில் பலகலைக்கழக, கல்லூரி மாணவர்களுக்கான சிறுகதைப் பயிற்றுநராக வெண்பலகை எனும் திட்டத்தில் செயலாற்றி வருகிறார். அதோடுமட்டுமல்லாமல் சிறுவர் நாவல்கள், சிறுவர் சிறுகதைகள், சிறுவர்களுக்கான படைப்பிலக்கியத் தளங்களை உருவாக்கி அடுத்த தலைமுறை மாணவர்களுக்கும் வழிகாட்டி வருகிறார். http://balamurugan.org என்கிற தன் அகப்பக்கத்தில் எழுதியும் வருகிறார்.

2 COMMENTS

  1. கணங்களும் மௌனங்களும்தான் கவிதையின் உறைவிடமாக உள்ளது.

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -