பெருநகர் கனவுகள்-9

கண்ணீர் பிரதேசம்

- Advertisement -

கண்ணீர் பிரதேசம்

கதவுகள் என ஒன்றுமில்லை
தாராளமாக உள்ளே வரலாம்.

எனது அழுகை
உனது விசும்பல்
எனது கேவல்
உனது கண்ணீர்
என எதையுமே
பொருட்படுத்தாத ஒரு பெருத்த
பரபரப்பின் நடுவே
நாமிருவரும் சந்தித்துக் கொள்ளலாம்.

நான் எனது பிரவேசத்தையும்
நீ உனது மரணத்தையும்
பரிமாறிக் கொள்ளலாம்.
நீ உள்ளே வரும் தருணம்
நான் பிறந்திருக்ககூடும்.

நீ உள்ளே வரும் தருணம்
குறைந்தபட்சம் யாரையும் பொருட்படுத்தாத
ஒரு கூட்டம் வேகமாய் நகர்ந்தபடியே இருப்பதை
நீ காணக்கூடும்.

எங்குத் தேடியும்
நான் கிடைக்கவில்லையெனில்
எனைத் தவறாக நினைத்துவிடாதே.
நான் அநேகமாக இன்னும் பிறந்திருக்க வாய்ப்பில்லை
அல்லது
இன்னும் எனது பிரவேசம்
அனுமதிக்கப்படாமல் இருக்கக்கூடும்.

பதற்றமடையாமல்
அங்கிருக்கும் ஒரு மலாய் சகோதரரின்
கடையில் அமர்ந்து
ஒரு சூடான தேநீர் குடித்துக் கொண்டிரு.
அது உனக்கான நகரமல்ல
என மெல்ல உணர்ந்து
நீயே விடுபட்டுச் செல்வாய்.

ஆகவே
நீ இப்பொழுதுவரை
உள்ளே வர எல்லாத் தகுதிகளுடனும்
ஒரு சினுங்கள்
பேரிரைச்சலாக மாறிவிடத்
தயாராகிவிட்டிருக்கிறது.

-கே.பாலமுருகன்

கே.பாலமுருகன்
கே.பாலமுருகன்https://minkirukkal.com/author/kbalamurugan/
மலேசிய எழுத்தாளர், தமிழாசிரியராகப் பணியாற்றி வருகிறார். இதுவரை இலக்கியம் சார்ந்து 15 நூல்களும், கல்வி ஆய்வியல் சார்ந்து 18 நூல்களும் இயற்றியுள்ளார். தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் இலக்கியத்திற்கான கரிகாற் சோழன் விருது, அன்னை வேளாங்கன்னி கலைக் கல்லூரியின் தனி நாயகர் தமிழ் நாயகர் விருது, குறிஞ்சி கபிலர் இயக்கத்தின் பாரதி விருது, மலேசியப் பல்கலைக்கழகத்தின் எம்.ஏ.இளஞ்செல்வன் விருது, சி.கமலநாதன் விருது, குடியரசு தின விருது என இலக்கியத்திலும் கலை படைப்புகளிலும் இதுவரை 25 சர்வதேச விருதுகள் பெற்றுள்ளார். மலேசியாவில் பலகலைக்கழக, கல்லூரி மாணவர்களுக்கான சிறுகதைப் பயிற்றுநராக வெண்பலகை எனும் திட்டத்தில் செயலாற்றி வருகிறார். அதோடுமட்டுமல்லாமல் சிறுவர் நாவல்கள், சிறுவர் சிறுகதைகள், சிறுவர்களுக்கான படைப்பிலக்கியத் தளங்களை உருவாக்கி அடுத்த தலைமுறை மாணவர்களுக்கும் வழிகாட்டி வருகிறார். http://balamurugan.org என்கிற தன் அகப்பக்கத்தில் எழுதியும் வருகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -