சகடக் கவிதைகள் – 8

குமிழ் விளையாட்டு

- Advertisement -

இந்த கவிதைத் தொகுப்பின் முந்தைய பகுதிகளைப் படிக்க இங்கே சொடுக்கவும்

குழலூதும் கண்ணா… உன் திருக்கையால்

குமிழ் ஊதிப் படைத்தனையோ

இப் பிரபஞ்சத்தை…

அனாதி காலமாய் தொட்டுத் தொடர்கிறதோ உன்

அளவிலா இப் பிரபஞ்ச விளையாட்டு

ஏகாந்தத்தில் திளைப்பவனே – நீ ஊதும்

இக்குமிழ்களை உடைத்து விளையாடும்

சிறுவனும் நீயன்றோ…

ஒவ்வொரு குமிழும் கோள்களாய்

அண்டமாய் பிரம்மாண்டமாய்

பல கோடி யுகங்களாய் தோன்றினும்

காலமற்றவனே கண்ணா – நின்

விரல் தீண்டி உடையும் நேரம் – உன்

கமலக் கண்மூடித் திறக்கும்

சில நொடிகள் தானன்றோ……

ராகவ் மிர்தாத்
ராகவ் மிர்தாத்http://www.rakavmirdath.com
மனித உளவியலையே மாற்றக்கூடிய சக்தி படைத்த சினிமாவில் தானும் ஒரு தவிர்க்க முடியாத பங்காற்ற வேண்டுமென்ற தணியாத கலைத்தாகத்தால் உந்தப்பட்ட படைப்பாளி, இயக்குனர், எழுத்தாளர்.இவரது படைப்புகள் வெகுவிரைவில் வெள்ளித்திரையில் காணக்கிடைக்கும் என்பதில் மகிழ்ச்சி.தேசிய விருது பெற்ற “பாரம்" படத்தின் திரைக்கதை மற்றும் வசனகர்த்தா.இவருடைய “மிருணா” என்கிற குறும்படம் ரீகல்டாக்கீஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -