சகடக் கவிதைகள் – 4

- Advertisement -

இந்த கவிதைத் தொகுப்பின் முந்தைய பகுதிகளைப் படிக்க இங்கே சொடுக்கவும்

என் நீண்ட இசைக்குப்பின்
நிலவிய மெளனத்தை
உணரும்போது புரிந்தது
ஓர் அழகான பேரிசையை
நான் இடையூறு செய்தது

———————————————————

பல்லியின் வாலைப்போல்
வேண்டிய இடத்தில்
துண்டித்து, பின்
வளரும் தன்மைகொண்டது
என் இதயம்

————————————————————

என் வீட்டை
நான் திறந்தேதான் வைத்திருப்பேன்
யாரையும் திருடனாக்கும்
எண்ணமெல்லாம் எனக்கில்லை

————————————————————

கனவிலிருந்து விழித்தேன்
அங்கே ஓர்
பிரம்மாண்டமான கனவு

————————————————————

உள்ளங்கையில் ஓர் துளியை
மறைத்துவைத்து
அமர்ந்திருந்தேன்…
என் கால்களை
நனைத்துச் சென்ற
அலைகளை அறியாமல்…

ராகவ் மிர்தாத்
ராகவ் மிர்தாத்http://www.rakavmirdath.com
மனித உளவியலையே மாற்றக்கூடிய சக்தி படைத்த சினிமாவில் தானும் ஒரு தவிர்க்க முடியாத பங்காற்ற வேண்டுமென்ற தணியாத கலைத்தாகத்தால் உந்தப்பட்ட படைப்பாளி, இயக்குனர், எழுத்தாளர்.இவரது படைப்புகள் வெகுவிரைவில் வெள்ளித்திரையில் காணக்கிடைக்கும் என்பதில் மகிழ்ச்சி.தேசிய விருது பெற்ற “பாரம்" படத்தின் திரைக்கதை மற்றும் வசனகர்த்தா.இவருடைய “மிருணா” என்கிற குறும்படம் ரீகல்டாக்கீஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

2 COMMENTS

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -