உயிர் மீள்தல்

கவிதை

- Advertisement -

வெகுநேரமெடுத்து இழையிழையாய்
இருவேறு செடிகளுக்கிடையே
இழுத்துக் கட்டிய அழகானதொரு மாளிகை.
போகும்போக்கில் சிதைத்து
சிரிப்பதவர்களின் இயல்புதான் என்றபோதிலும்..
அவர்களையெல்லாம் மாற்றுவதென்பது
நதியில் நான் புலம்பெயர்வது போன்றதாகும்.
அதற்காக நீந்தும் மீனாகவா மீள்வது?
வேருடன் பிடுங்கினாலும்
ஒவ்வொரு உயிர்செல்களும் மரிக்க மறுத்து
காற்றில் உருலும் கார்குழலாய் மீள்கின்றன.
இப்படித்தான் மீண்டும் மீண்டும்
தன்னம்பிக்கையோடு வலையை நெய்ய
எந்நேரமும் ஆயத்தமாக இருப்பதென்பதே
என் போன்ற சிலந்தியின் இயல்பாகிவிடுகிறது!

தேன்மொழி அசோக்
தேன்மொழி அசோக்https://minkirukkal.com/author/thenmozhi/
கவிமாலை,தங்கமீன் கலை இலக்கிய வட்டம் ஆகிய அமைப்புகளில் கவிதைகள் எழுதி வருகிறார். மின்னணுவியல் மற்றும் தொலைதொடர்பியலில் பொறியியல் பட்டம் பெற்று இரண்டு வருடங்கள் மென்பொருள் துறையில் பணியாற்றிய அனுபவம் உள்ளது.இவரது கவிதைகள் தமிழ் முரசு நாளிதழிலும்,கட்டுரைகள் தேக்கா எக்ஸ்பிரஸ் இணைய இதழிலும் வெளியாகியுள்ளன. கற்பனை சிறகை விரித்துப் பறக்க, கவிதைகள் பக்கபலமாய் இருப்பதாக நினைக்கிறார்..கவிதைகளோடு பழகி இன்னும் நெருக்கமாக விரும்புகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -