அப்பாவின் நினைவு நாள்…..!!!!

கவிதை

- Advertisement -

“அவருக்கு
பிடிக்குமென்று
அரை கிலோ கறி எடுத்து பொடியாக
நறுக்கி வறுத்து
சமைத்து வைத்து
காத்துக் கொண்டிருக்கிறாள் அம்மா

விடியும் வரை
மேலிருந்து
கீழிறங்கி வராமல்
அழுதுகொண்டிருக்கிற
அம்மாவை
உற்று பார்த்தபடியே
சிரித்துக் கொண்டிருக்கிறார்
ஒரு வருடத்திற்கு
முன்பு இதே நாளில் புகைப்படமாக தொங்கவிடப்பட்ட அப்பா …..!!!!

கிராமத்து கவிஞன்
கிராமத்து கவிஞன்https://minkirukkal.com/author/Sakthisamathmurthy/
கவிதை வாசிப்பது பாடல் பாடுவது ,பறை இசைப்பது, உழைக்கும் மக்களின் உணர்வுகளை கவிதையாக எழுதுவது.

1 COMMENT

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -