யமுனாவீடு – 80

தொடர் கவிதை

- Advertisement -

பக்குவமற்றவன்
எங்கும் நகர்ந்துபோகாமல்
மௌனமாகத்தான் அமர்ந்திருந்தான்
மனதுக்குள் படிந்துகிடக்கிறது

கண்விழித்து பார்த்திருக்கலாம்
விரித்த கைகளில்
தலையைக் கோதிவிட்டு விலக
நான் எழுந்துபோகவேண்டும்

கடல்சேரும் முழு ஆகாயத்தை
பார்த்துக்கொண்டிருப்பவனிடம்
விழு என்றால்
விழக்கூடியவன்தானே

ஒரு கணத்தில்
அமைதியாக இருக்கிறான்
நான் இருக்ககூடாதென்று
பேரமைதியாக இருக்கிறான்

நேற்றும் இன்றும் தொடர
சிலிர்க்கச்செய்யும் தீர்த்தம் பருகி
நேரம் கிடைக்கும்போதெல்லாம்
வேண்டுதலோடு நிற்கிறான்

இரக்கமற்றதல்ல புறக்கணிப்பு
ஒவ்வொன்றாய்
எண்ணிக்கொண்டிருக்கும்
ஒரு பிறப்பு

நிலைக்கண்ணாடி முன்பு நின்று
தாய்போலப்பார்க்கிறான்
ஆறுதலாய்
அருகே நிற்கிறாள் யமுனா

பாண்டித்துரை
பாண்டித்துரைhttps://minkirukkal.com/author/pandiidurai/
பெயர் இராஜேந்திரன் நீதிப்பாண்டி. (அப்பா பெயர் இராஜேந்திரன்). சொந்த ஊர் அ.காளாப்பூர் (சிவகங்கை மாவட்டம்) வணிகவியல் இளங்கலை படித்த நான் தற்போது சிங்கப்பூரில் கட்டுமானத்துறையில் கட்டுமான பாதுகாப்பு பிரிவில் மேலாளராக பணிபுறிகிறேன். 2006 முதல் பாண்டித்துரை எனும் பெயரில் எழுதிவருகிறேன். அவநிதாவின் சொல் & மாயா மது உதயா எனும் இரண்டு கவிதை நூல்களை எழுதியிருக்கிறேன். குறும்படம் மீது உள்ள ஆர்வத்தில் நண்பர்களுடன் இணைந்து சில குறும்பட முயற்சிகள் செய்துள்ளேன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -