பெருநகர் கனவுகள் – 16

மழைப்பொழுதும் சிகரெட் துண்டுகளும்

- Advertisement -

மழைப்பொழுதும் சிகரெட் துண்டுகளும்

புகைத்துப்போட்ட சிகரெட் துண்டுகள்
ஓர் அழையாத மழைப்பொழுதில்
பொசுங்கி பொசுங்கி
எழுப்பும் சத்தத்தை
இரசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தீத்துகல்கள் இருள்வது
ஒரு மனவேட்கை
தீர்ந்து முடிவதாக
தோன்றும் கணங்களில்
தம்மைத் தாமே
ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார்கள்.

இன்னும் பல
நிறைவேறாத வேண்டுதல்களுக்கும்
கைக்கூடாத சந்திப்புகளுக்கும்
தீர்ந்திடாத துயரங்களுக்கும்
ஒரு மழைப்பொழுதும்
ஒரு பெட்டி சிகரெட் கட்டுகளும்
வேண்டுமெனத் தீர்மானித்துக் கொள்வார்கள்.

-கே.பாலமுருகன்

கே.பாலமுருகன்
கே.பாலமுருகன்https://minkirukkal.com/author/kbalamurugan/
மலேசிய எழுத்தாளர், தமிழாசிரியராகப் பணியாற்றி வருகிறார். இதுவரை இலக்கியம் சார்ந்து 15 நூல்களும், கல்வி ஆய்வியல் சார்ந்து 18 நூல்களும் இயற்றியுள்ளார். தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் இலக்கியத்திற்கான கரிகாற் சோழன் விருது, அன்னை வேளாங்கன்னி கலைக் கல்லூரியின் தனி நாயகர் தமிழ் நாயகர் விருது, குறிஞ்சி கபிலர் இயக்கத்தின் பாரதி விருது, மலேசியப் பல்கலைக்கழகத்தின் எம்.ஏ.இளஞ்செல்வன் விருது, சி.கமலநாதன் விருது, குடியரசு தின விருது என இலக்கியத்திலும் கலை படைப்புகளிலும் இதுவரை 25 சர்வதேச விருதுகள் பெற்றுள்ளார். மலேசியாவில் பலகலைக்கழக, கல்லூரி மாணவர்களுக்கான சிறுகதைப் பயிற்றுநராக வெண்பலகை எனும் திட்டத்தில் செயலாற்றி வருகிறார். அதோடுமட்டுமல்லாமல் சிறுவர் நாவல்கள், சிறுவர் சிறுகதைகள், சிறுவர்களுக்கான படைப்பிலக்கியத் தளங்களை உருவாக்கி அடுத்த தலைமுறை மாணவர்களுக்கும் வழிகாட்டி வருகிறார். http://balamurugan.org என்கிற தன் அகப்பக்கத்தில் எழுதியும் வருகிறார்.

1 COMMENT

  1. தீத்துகல்கள் தீரும்வரை மனத்தில் தோன்றும் சிக்கல்களைக் தற்காலிகமாக கட்டவிழ்த்து விடுகிறது சிகரெட் துண்டுகள்.அந்த தற்காலிக அமைதி,தீர்வு அழிவுக்கான நிரந்தரத்தை உறுதிப்படுத்துகிறது.இருப்பினும்,தற்காலிக மகிழ்ச்சியைத் தான் மனம் நாடுகிறது.

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -