இன்னொரு முகம்

கவிதை

- Advertisement -

இளமையை உறிஞ்சியபின்
சக்கையாய்த் துப்பி விட்டு
தன்னம்பிக்கையை
பிளிறலுடன்
காலிலிட்டு நசுக்கி விட்டு
பிச்சைக்காரனாய்
திருவோடு ஏந்தவைத்து
திரும்பிப் பார்க்காவிடில்
கோழையாய் அழவிட்டு
தெருப்பெயருக்காய்
தெருநாயாய் அலையவிட்டு
பாடத்தை விட்டு விட்டுப்
பெயரை எழுத வைத்து
பிணம் தின்னும் கழுகாய்
இதயத்தைக் கிழித்து விட்டு
கண் இமைகளை
ஆணியடித்து மாட்டிவிட்டு
தடதடக்கும் வண்டியை
மூளையில் இரவெல்லாம்
ஓடவிட்டு
தாடி வளர்த்து
தன்னையே மறந்து
பித்துப்பிடிக்க வைக்கும்
இந்த இன்னொரு
முகம் தான்
எத்தனை அழகு
இக்காதலுக்கு

கண்ணன்
கண்ணன்https://minkirukkal.com/author/vkannan/
வசிப்பது சேலம் தாரமங்கலத்தில். வேலை பெங்களூரில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில். முதல் கவிதை நவீன விருட்சத்தில் 30வருடத்திற்கு முன்பு. செந்தூரம் இதழில் "பூனை புராணம்" கவிதை, தாய் மின்னிதழில் "பந்தி விசாரிப்பு" கவிதை வெளியாகி உள்ளது. இவருக்கு வாசிப்பது, இசை கேட்பது, கிரிக்கெட் பார்ப்பது, நல்ல ஓவியங்களை ரசிக்க, பயணம் செய்ய மிகவும் பிடிக்கும்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -