உதிர்ந்த வாலிப சிறகு

கவிதை

- Advertisement -

அடைகாத்த கோழி கொத்தி விரட்டும்
குஞ்சுகளைத் தானாக இரை தேட!
நாவால் நக்கிய வெள்ளைப் பசுவும்
கன்றை முட்டித் தள்ளும் முன்னேற!
பொறுமையை மறந்து தத்தளிக்கும் மகன்
வாலிபக் கப்பலில் ஏறித் திண்டாடுகிறான்
அவன் மகனால் நங்கூரமிடும் வரை!
மனித இனம் மட்டும் தானிங்கு
மல்லுக்கட்டுகிறது பிள்ளைகள் வளர்ச்சியில்
மரண அழைப்பு வரும் வரை! என்றபோதும்
அன்றைய ஆனந்த மழைத்துளிகளால்
மனக் காகிதக் கிறுக்கல்கள் மக்கிவிடுமோவென
வெள்ளைக் காகிதத்தில் கிறுக்கியதால்-இன்று
கண்ணீர் மழையில் நனைய விடாமல்
அந்த வாலிபம் தொலைத்த தந்தைக்கு
குடையாகிறது மகனின் அன்பு முத்தங்கள்!

தேன்மொழி அசோக்
தேன்மொழி அசோக்https://minkirukkal.com/author/thenmozhi/
கவிமாலை,தங்கமீன் கலை இலக்கிய வட்டம் ஆகிய அமைப்புகளில் கவிதைகள் எழுதி வருகிறார். மின்னணுவியல் மற்றும் தொலைதொடர்பியலில் பொறியியல் பட்டம் பெற்று இரண்டு வருடங்கள் மென்பொருள் துறையில் பணியாற்றிய அனுபவம் உள்ளது.இவரது கவிதைகள் தமிழ் முரசு நாளிதழிலும்,கட்டுரைகள் தேக்கா எக்ஸ்பிரஸ் இணைய இதழிலும் வெளியாகியுள்ளன. கற்பனை சிறகை விரித்துப் பறக்க, கவிதைகள் பக்கபலமாய் இருப்பதாக நினைக்கிறார்..கவிதைகளோடு பழகி இன்னும் நெருக்கமாக விரும்புகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -