காயார் கோமடம் ஸேஷாத்ரி

காயார் கோமடம் ஸேஷாத்ரி
1 POSTS0 COMMENTS
பிறந்த ஊர் மதுராந்தகம். இலக்கிய வீதியின் சிறப்புப்பரிசுடன் 1979 ஆம் ஆண்டு எழுதத் தொடங்கினேன். தமிழில் வெளிவரும் பிரபல இதழ்கள் பலவற்றிலும் எழுதியுள்ளேன். இது வரை சுமார் நூற்றைம்பது சிறுகதைகள், ஐம்பது கவிதைகள், முன்னூற்றுக்கும் மேற்பட்ட ஆன்மிக மற்றும் சமுதாய நலன் சார்ந்த கட்டுரைகள் மற்றும் ஒரேயொரு நகைச்சுவை நாடகம் ஆகியவை வெளியாகி உள்ளன. சாதனையாளர்கள் பலரை நேர்காணல்கள் செய்த பேட்டிக் கட்டுரைகளும் எழுதியுள்ளேன். ஆனந்த விகடன், கல்கி, தினமணி நாளிதழுடன் நெய்வேலி புத்தகக் கண்காட்சி மற்றும் எழுத்தாளர் திருமதி. சிவசங்கரி இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டிகள், கோவை சிறுவாணி வாசகர் மையம், காணி நிலம் காலாண்டிதழ், சங்கப் பலகை முகநூல் குழுமம், இலக்கியப் பீடம் மாத இதழ், மஞ்சரி மாத இதழ், அமுதசுரபி மாத இதழ், சென்னை பாரதி கலைக்கழகம் மற்றும் காஞ்சிபுரம் ஸ்ரீசங்கரமடத்தின் இந்து தமிழ்க் கவிஞர் மன்றம் ஆகிய இதழ்கள் மற்றும் இலக்கிய அமைப்புகள் நடத்திய நாடகம், சிறுகதை மற்றும் கவிதைப் போட்டிகளில் பல்வேறு பரிசுகள் பெற்றுள்ளேன். கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் தினமணி நாளிதழின் தலையங்கப் பக்கத்தில் தொடர்ந்து சமூக நலன், விளையாட்டுத்துறை சார்ந்த பல்வேறு கட்டுரைகளை வழங்கி வருகிறேன். " கனாக்கண்ட தோழி " ( இரண்டு பதிப்புகள் ), " மதுராந்தகம் ஸ்ரீஏரிகாத்தராமன் " மற்றும் "ஸ்ரீ திருமங்கையாழ்வார்" ஆகிய மூன்று ஆன்மிக நூல்களும், "அக்ரஹாரத்து ஹெர்குலிஸ்" என்ற சிறுகதைத் தொகுப்பும் இதுவரை வெளிவந்துள்ளன. இலக்கிய வீதி, தமிழ் அரசி வார இதழ், கோவை சிறுவாணி வாசகர் மையம் ஆகியவை வெளியிடப்பட்ட சிறுகதைத் தொகுப்பு நூல்களில் தலா ஒரு சிறுகதை வெளியாகி உள்ளது. தொடர்ந்து எழுத்துலகில் உற்சாகமாக இயங்கி வருகிறேன்.

படைப்புகள்