யமுனா வீடு – 51

தொடர் கவிதைகள்

- Advertisement -

தன்னை அர்பணித்தவளுக்கு
பறந்து நடனமாடும்
ஒரு கனவு வருகிறது
அலங்கரிக்கப்பட்ட
நகரம் ஒளிர்வதைக் காண்கிறாள்

இந்த நகரத்தின் உறக்கத்தை கலைத்தவளைப்போல
காற்று தொட்டதும் விழித்துக்கொள்கிறாள்

மிச்ச வாழ்வில்
நிச்சயமாக உறக்கம் வந்துவிட
நீண்ட நேரம்
நடந்து பார்க்கிறாள்

பொன் வசந்தமானவள்
வரும் பகல் பொழுதில்
யாரோ உரையாடிக்கொண்டிருக்க
ஒன்றை நிராகரிக்கிறாள்
ஒவ்வொன்றையும் நிராகரிக்கிறாள்

ஏதோ ஒன்று நினைத்துக்கொள்ள
ஏதோ ஒன்று மறந்துவிட
ஏதோ ஒன்றைப் பற்றிக்கொள்ளும்
யமுனா

ஒவ்வொரு வண்ணத்தை
எடுத்துப் பூசிக்கொண்டு
ஒரு குழந்தையைப்போல
அவள் சேருமிடறிய
இந்தப் பகல் தீராது
மனதின் சிறகை விரித்து
பறந்துகொண்டிருக்கிறாள்.

பாண்டித்துரை
பாண்டித்துரைhttps://minkirukkal.com/author/pandiidurai/
பெயர் இராஜேந்திரன் நீதிப்பாண்டி. (அப்பா பெயர் இராஜேந்திரன்). சொந்த ஊர் அ.காளாப்பூர் (சிவகங்கை மாவட்டம்) வணிகவியல் இளங்கலை படித்த நான் தற்போது சிங்கப்பூரில் கட்டுமானத்துறையில் கட்டுமான பாதுகாப்பு பிரிவில் மேலாளராக பணிபுறிகிறேன். 2006 முதல் பாண்டித்துரை எனும் பெயரில் எழுதிவருகிறேன். அவநிதாவின் சொல் & மாயா மது உதயா எனும் இரண்டு கவிதை நூல்களை எழுதியிருக்கிறேன். குறும்படம் மீது உள்ள ஆர்வத்தில் நண்பர்களுடன் இணைந்து சில குறும்பட முயற்சிகள் செய்துள்ளேன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -