நீயே நிரப்பிக்கொள் என்று
தூரத்தில் ஒளிர்ந்துகொண்டிருந்து
தீபம்
முழுநிலவு பார்த்துக்கொண்டிருக்க
யாருமற்ற வெளியில் அமர்ந்திருந்தேன்
நிறைய மனிதர்கள்
வந்து செல்கிறார்கள்
எல்லோருடைய இருப்பையும்
வேடிக்கை பார்க்கிறேன்
சிறுமியைப்போல
சின்னஞ்சிறிதாய் ஒளிரும்
தீபத்தில்
நீ தெரிகிறாய்
நினைவூட்டுவதற்காக
திருக்கோவில் மணி
ஒலிக்கிறது
கடற்பரப்பில் எழுந்து நிற்கிறேன்
கொஞ்சம் தடுமாறுகிறேன்
தழுவிச்செல்லும்
குளிர்ந்த காற்றில்
உன் கருணை
உன்னுடைய நினைவோடுதான்
பரபரப்பான இந்த நகரத்தில்
ஒவ்வொரு நாளையும்
துவங்கவேண்டும்
உணர்ந்துகொண்டேன்
இது விலகுதல் இல்லை
உனதன்பில் ஆழ்ந்துபோதல்
நீ கடல் பார்க்கவே
காத்திருக்கிறேன் யமுனா.
தொடர்பு சிறப்பாக கவிபடைத்து வரும் தங்களுக்கு வாழ்த்துகளும்,பாராட்டுகளும்.
மிக்க நன்றி