யமுனா வீடு – 34

தொடர் கவிதைகள்

- Advertisement -

ஒரு தேநீர் கோப்பையை வைத்துக்கொண்டு
யோசித்துக்கொண்டிருந்தாய்
மெல்லப் பருகச்சொன்னேன்
தேநீரை குடித்து முடிக்கும் நேரம்
பிரார்தனைக்கு ஒப்பானது
ஆலயமணிச் சத்தம் கேட்டிருக்கும்
இந்தப்பொழுதில்
யாரோ ஒருவரின் பயணத்தில்
தீர்வுகளை எழுதிக்கொண்டிருக்கலாம்
தொலைந்த பொழுதுகளைத் தேடிக்கொண்டு வரவில்லை
நிகழும் ஒருகணத்தில்
வரையப் போகிறாய் கிளைபரப்பிய மரத்தை.
அது உனக்கான காடாக உருமாறும்
ஓர் கனவைப்போல
நிஜம் உன்னை வந்தடையும் யமுனா
நீயாக இருக்க இப்போதைக்கு இந்தத்
தேநீரைப் பருகிமுடி

பாண்டித்துரை
பாண்டித்துரைhttps://minkirukkal.com/author/pandiidurai/
பெயர் இராஜேந்திரன் நீதிப்பாண்டி. (அப்பா பெயர் இராஜேந்திரன்). சொந்த ஊர் அ.காளாப்பூர் (சிவகங்கை மாவட்டம்) வணிகவியல் இளங்கலை படித்த நான் தற்போது சிங்கப்பூரில் கட்டுமானத்துறையில் கட்டுமான பாதுகாப்பு பிரிவில் மேலாளராக பணிபுறிகிறேன். 2006 முதல் பாண்டித்துரை எனும் பெயரில் எழுதிவருகிறேன். அவநிதாவின் சொல் & மாயா மது உதயா எனும் இரண்டு கவிதை நூல்களை எழுதியிருக்கிறேன். குறும்படம் மீது உள்ள ஆர்வத்தில் நண்பர்களுடன் இணைந்து சில குறும்பட முயற்சிகள் செய்துள்ளேன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -