பெருநகர் கனவுகள் – 2

கையசைத்தல்

- Advertisement -

கையசைத்தல்

காரணமே இல்லாமல்
சேர்ந்தும் பிரிந்தும்
செல்கின்ற பொழுதுகளில்
ஓர் இரம்மியமான
கையசைத்தலை மனம்
கற்பனை செய்து கொள்கிறது.

அது கையசைத்தலாக
இருக்க வேண்டுமென்றுகூட
கட்டாயம் இல்லை.

காற்றில் களையும்
கூந்தலைச் சரிசெய்யும் சாக்கில்
வெண்மை பூத்தக் கண்ணாடியை
உள்ளங்கையால் துடைக்கும் பாவனையில்
பொய்யாகத் தெரியும்
கையசைத்தல்கூட
இங்கு நிகழ்வதில்லை.

அம்மாவின் பிடியில்
கவனமாகச் செல்லும்
சிறுமிகள்
அப்பாவின் முதுகில்
களைப்புடன் சாய்ந்திருக்கும்
சிறுவர்கள்
மிதிவண்டியின் பின்சீட்டில்
அமர்ந்திருக்கும் பையன்கள்
என அத்தனைக்கும் நடுவிலேயேயும்
இந்த உலகம் தனித்திருக்கிறது.

கையசைத்தல் சாத்தியப்படாத
ஒரு நகரில்
கைகளை வரைந்து பார்க்கிறேன்.

கே.பாலமுருகன்
கே.பாலமுருகன்https://minkirukkal.com/author/kbalamurugan/
மலேசிய எழுத்தாளர், தமிழாசிரியராகப் பணியாற்றி வருகிறார். இதுவரை இலக்கியம் சார்ந்து 15 நூல்களும், கல்வி ஆய்வியல் சார்ந்து 18 நூல்களும் இயற்றியுள்ளார். தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் இலக்கியத்திற்கான கரிகாற் சோழன் விருது, அன்னை வேளாங்கன்னி கலைக் கல்லூரியின் தனி நாயகர் தமிழ் நாயகர் விருது, குறிஞ்சி கபிலர் இயக்கத்தின் பாரதி விருது, மலேசியப் பல்கலைக்கழகத்தின் எம்.ஏ.இளஞ்செல்வன் விருது, சி.கமலநாதன் விருது, குடியரசு தின விருது என இலக்கியத்திலும் கலை படைப்புகளிலும் இதுவரை 25 சர்வதேச விருதுகள் பெற்றுள்ளார். மலேசியாவில் பலகலைக்கழக, கல்லூரி மாணவர்களுக்கான சிறுகதைப் பயிற்றுநராக வெண்பலகை எனும் திட்டத்தில் செயலாற்றி வருகிறார். அதோடுமட்டுமல்லாமல் சிறுவர் நாவல்கள், சிறுவர் சிறுகதைகள், சிறுவர்களுக்கான படைப்பிலக்கியத் தளங்களை உருவாக்கி அடுத்த தலைமுறை மாணவர்களுக்கும் வழிகாட்டி வருகிறார். http://balamurugan.org என்கிற தன் அகப்பக்கத்தில் எழுதியும் வருகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -