யமுனா வீடு

தொடர் கவிதை - 12

- Advertisement -

சித்ராவிடமிருந்து நட்பழைப்பு
சின்னகுயில் சித்ராவா என்றேன்
இல்லை வெறும் சித்ரா என்றாள்
வெறும் சித்ராவாக யாருமே
இருக்க முடியாதே
ஏதாவது ஒரு சித்ராவாக நீ இருக்கக்கூடுமென்றேன் …
முன்பொருநாள்
நட்டு, போல்டுகளைக் கடையும்
நிறுவனத்தில் தரக்கட்டுப்பாட்டுப்
பிரிவில் பணிபுரிந்த சித்ரா
அப்படி என்ன சிறப்பு
இந்தத் சித்ராவினுள்
இருக்கக்கூடுமென்று
யோசிக்கத் தொடங்கினாள்.

பாண்டித்துரை
பாண்டித்துரைhttps://minkirukkal.com/author/pandiidurai/
பெயர் இராஜேந்திரன் நீதிப்பாண்டி. (அப்பா பெயர் இராஜேந்திரன்). சொந்த ஊர் அ.காளாப்பூர் (சிவகங்கை மாவட்டம்) வணிகவியல் இளங்கலை படித்த நான் தற்போது சிங்கப்பூரில் கட்டுமானத்துறையில் கட்டுமான பாதுகாப்பு பிரிவில் மேலாளராக பணிபுறிகிறேன். 2006 முதல் பாண்டித்துரை எனும் பெயரில் எழுதிவருகிறேன். அவநிதாவின் சொல் & மாயா மது உதயா எனும் இரண்டு கவிதை நூல்களை எழுதியிருக்கிறேன். குறும்படம் மீது உள்ள ஆர்வத்தில் நண்பர்களுடன் இணைந்து சில குறும்பட முயற்சிகள் செய்துள்ளேன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -