யமுனா வீடு -98

தொடர் கவிதை

- Advertisement -

கனவுகளில் தொலைந்து போகிறவன்
மௌனம் கலைத்து
ஆறிப்போன தேநீரை அருந்துகிறான்
அப்படியே திரும்பிப்பார்க்கிறான்

உயரமான கட்டிடங்களைப்
பார்க்கும் போதெல்லாம்
ஏறிப்பார்கயக்கத்தோன்றும் ஒருவனுக்குக்
குதித்துப்பார்க்கத் தோன்றுவதில்லை
உயரம் ஏறியவன்
ஆகயத்தைப் பார்க்கிறான்

நீல வானம் ஒரு கடல்
உயரனமான கட்டிடத்திலிருந்து
நீல வானம் பார்த்து
கனவில் குதித்துப்பார்க்கிறான்
ஒரு பேரலையில்
எழுந்து வருகிறான்

வெண் சங்கைப் பற்றிக்கொண்டு
கடல் பார்த்து நின்றவனை
நீ பார்க்கிறாய் யமுனா
கலங்கி நின்றவனின் தடம்பற்றுகிறாய்

இறங்கிச்செல்லும் அலைகளைப்போல நீ வந்து
கைகளைப் பற்றுகிறாய்
பற்றுதலில் நீ தந்தஅழுத்தத்தில்
கரைந்துவிடுகிறான் யமுனா
ஒரு பேரலை எழுந்து வருகிறது

பாண்டித்துரை
பாண்டித்துரைhttps://minkirukkal.com/author/pandiidurai/
பெயர் இராஜேந்திரன் நீதிப்பாண்டி. (அப்பா பெயர் இராஜேந்திரன்). சொந்த ஊர் அ.காளாப்பூர் (சிவகங்கை மாவட்டம்) வணிகவியல் இளங்கலை படித்த நான் தற்போது சிங்கப்பூரில் கட்டுமானத்துறையில் கட்டுமான பாதுகாப்பு பிரிவில் மேலாளராக பணிபுறிகிறேன். 2006 முதல் பாண்டித்துரை எனும் பெயரில் எழுதிவருகிறேன். அவநிதாவின் சொல் & மாயா மது உதயா எனும் இரண்டு கவிதை நூல்களை எழுதியிருக்கிறேன். குறும்படம் மீது உள்ள ஆர்வத்தில் நண்பர்களுடன் இணைந்து சில குறும்பட முயற்சிகள் செய்துள்ளேன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -