யமுனாவீடு -77

தொடர் கவிதை

- Advertisement -

ஓர் இரவில்தான்
அற்புதம் நிகழும்
கண்களைத் மூடித்
திறந்து பார்

ஒற்றைச் சிறகு
விழுந்து கிடக்க
பொறுமையோடு
கையை நீட்டு

நேரம் கிடைத்தால்
யாருக்காவது அழை
தயக்கமின்றி பேசு
ஊஞ்சலை ஆட்டிவிடு

வாழ்க்கையின் போக்கில்
நடந்துசெல்லும் உன்
பாதத்தில் சிறகு முளைக்கும்
பறக்கத் தயாராக இரு

பறவையாகும் நீ
வான் நோக்கி பறக்கிறாய்
ஒரு வேளை நீ
கடல்பார்க்கலாம்

உள்ளொளி வெளிச்சத்தில்
வார்த்தைகள் வருவதில்லை
சத்தமில்லாமல் விசும்பு
அரவணைக்கும் கை யமுனாதான்

பாண்டித்துரை
பாண்டித்துரைhttps://minkirukkal.com/author/pandiidurai/
பெயர் இராஜேந்திரன் நீதிப்பாண்டி. (அப்பா பெயர் இராஜேந்திரன்). சொந்த ஊர் அ.காளாப்பூர் (சிவகங்கை மாவட்டம்) வணிகவியல் இளங்கலை படித்த நான் தற்போது சிங்கப்பூரில் கட்டுமானத்துறையில் கட்டுமான பாதுகாப்பு பிரிவில் மேலாளராக பணிபுறிகிறேன். 2006 முதல் பாண்டித்துரை எனும் பெயரில் எழுதிவருகிறேன். அவநிதாவின் சொல் & மாயா மது உதயா எனும் இரண்டு கவிதை நூல்களை எழுதியிருக்கிறேன். குறும்படம் மீது உள்ள ஆர்வத்தில் நண்பர்களுடன் இணைந்து சில குறும்பட முயற்சிகள் செய்துள்ளேன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -