யமுனாவீடு -59

தொடர் கவிதை

- Advertisement -

இத்தகுபொழுதிலிருந்து விடுபட
எழும்போதே நினைத்துவிடுகிறேன்
நீதான் தொடங்கிவைக்கிறாய்
இந்த நாளை இப்படித்தொடர் என்று

வழக்கமாக நேரத்திற்கு எதையெல்லாம் செய்யவேண்டுமென்பதன் பட்டியல்
தொடரத்தான் செய்கிறது

எப்படியாவது
எழுந்து நடந்துவிடுகிறேன்
ஒரு துளி மகிழ்வைத் தேடுவது
பழகிவிட்டது

சிக்கல்களை உருவாக்குவது
சிக்கல்களை தீர்ப்பதிலே
இந்தப்பொழுது ஒளிரத்தொடங்கிவருகிறது

இரக்கமற்று
கடந்து போகும் இந்தநாளில்
ஒரு தேநீரைக்குடிக்க வேண்டும்
ஒரு முகத்தை பார்க்க வேண்டும்

எல்லோரும் பிரிந்து போகின்றவர்களாக இருக்கையில்
யாரொருத்தரும் அழைக்கப்போவதில்லை

இந்த நிமிடம்
நான் தேடி வருவதற்கு
கடல் இருக்கிறது.
என்னை விட்டு
கடல் செல்வதில்லை
யமுனா
கடல்பார்த்த அனுபவத்தை
எடுத்துக்கொடுக்கிறாய்.

பாண்டித்துரை
பாண்டித்துரைhttps://minkirukkal.com/author/pandiidurai/
பெயர் இராஜேந்திரன் நீதிப்பாண்டி. (அப்பா பெயர் இராஜேந்திரன்). சொந்த ஊர் அ.காளாப்பூர் (சிவகங்கை மாவட்டம்) வணிகவியல் இளங்கலை படித்த நான் தற்போது சிங்கப்பூரில் கட்டுமானத்துறையில் கட்டுமான பாதுகாப்பு பிரிவில் மேலாளராக பணிபுறிகிறேன். 2006 முதல் பாண்டித்துரை எனும் பெயரில் எழுதிவருகிறேன். அவநிதாவின் சொல் & மாயா மது உதயா எனும் இரண்டு கவிதை நூல்களை எழுதியிருக்கிறேன். குறும்படம் மீது உள்ள ஆர்வத்தில் நண்பர்களுடன் இணைந்து சில குறும்பட முயற்சிகள் செய்துள்ளேன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -