பெருநகர் கனவுகள் – 11

சொல்லி அனுப்புதல்

- Advertisement -

சொல்லி அனுப்புதல்

ஏஞ்சலினைப்
பார்க்க நேர்ந்தால்
கேட்டதாகச் சொல்லவும்
என மிகுந்த கணிவுடன்
அவள் சொல்லியனுப்பிய
தகவலுடன் நாள் முழுவதும்
பேராசையுடன் அலைந்து திரிந்து
வேலைகளில் தோய்ந்து
பற்பல முகங்களைக் கடந்து
பொழுது தீரும் வேளையில்
சட்டென ஞாபகமுற்றாள் ஏஞ்சலின்.

எந்த ஏஞ்சலின்
என்கிற எந்தத் தகவலும்
இல்லை என்னிடம்.

நகரின் வெயிலுக்குள்
ஒரு பழக்கடையின் முன்னே
அவள் நின்றிருக்கக்கூடும் அல்லது
நாளிதழ் கடையின் உள்ளே
கால் மேல் காலிட்டு
பகலை மென்றிருப்பவளாக இருக்கக்கூடும்.

மீண்டுமொரு பொழுதில்
ஏஞ்சலின் பற்றி அவள் சொல்லக்கூடும்
அல்லது வேறு பெயரை உச்சரிக்கக்கூடும்.
எப்பொழுதும் ஏதாவது ஒரு பெயரை
அவள் சொல்லிக் கொண்டே இருக்கிறாள்.

இன்றிரவு
அவள் அழைத்து
ஏஞ்சலினைப் பார்த்தாயா எனக் கேட்பாள்.

– கே.பாலமுருகன்

கே.பாலமுருகன்
கே.பாலமுருகன்https://minkirukkal.com/author/kbalamurugan/
மலேசிய எழுத்தாளர், தமிழாசிரியராகப் பணியாற்றி வருகிறார். இதுவரை இலக்கியம் சார்ந்து 15 நூல்களும், கல்வி ஆய்வியல் சார்ந்து 18 நூல்களும் இயற்றியுள்ளார். தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் இலக்கியத்திற்கான கரிகாற் சோழன் விருது, அன்னை வேளாங்கன்னி கலைக் கல்லூரியின் தனி நாயகர் தமிழ் நாயகர் விருது, குறிஞ்சி கபிலர் இயக்கத்தின் பாரதி விருது, மலேசியப் பல்கலைக்கழகத்தின் எம்.ஏ.இளஞ்செல்வன் விருது, சி.கமலநாதன் விருது, குடியரசு தின விருது என இலக்கியத்திலும் கலை படைப்புகளிலும் இதுவரை 25 சர்வதேச விருதுகள் பெற்றுள்ளார். மலேசியாவில் பலகலைக்கழக, கல்லூரி மாணவர்களுக்கான சிறுகதைப் பயிற்றுநராக வெண்பலகை எனும் திட்டத்தில் செயலாற்றி வருகிறார். அதோடுமட்டுமல்லாமல் சிறுவர் நாவல்கள், சிறுவர் சிறுகதைகள், சிறுவர்களுக்கான படைப்பிலக்கியத் தளங்களை உருவாக்கி அடுத்த தலைமுறை மாணவர்களுக்கும் வழிகாட்டி வருகிறார். http://balamurugan.org என்கிற தன் அகப்பக்கத்தில் எழுதியும் வருகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -