பட்ட மரம்

கவிதை

- Advertisement -

பரவசமாய் கழியும் நாட்களில்
கசப்பான நிகழ்வுகளால் விழி நீர்
உதிர்ந்து வாழ்வின் இருளான
பக்கங்களை மீட்டுக் கொண்டே சுழல்கிறது…!

கனமான நினைவுகள் சுமந்து
நெருப்பாய் நகரும் வாழ்வை போலி புன்னகையால் அலங்கரித்து பிறர்
காண இன்புற்று வாழ்வதும் கலையே….!

நெருங்கியவர் கானலாய் கரைந்து
கடந்த நொடிகளும் நினைவுகள் பரிசளித்த பிரிவும் இன்புற்று மகிழ்ந்து ஓய்ந்து
உறைந்த நிஜமும் அழியாது கண்மணியே..!

உடைவுகள் ஆட்கொண்டு சிந்தை
செயலிழந்து உடல் மரத்து உற்சாகம்
வலுவிழந்து நடைபிணமாய் நகரும்
வாழ்வில் ரணங்கள் புதிதுதில்லையே…!

பட்ட மரம் ஈரம் எதிர் தேடி அலைந்து
வாழ்வை முடித்து சருகாவது போல்
உணர்வால் மரணித்த மானிடன்
உயிர் வாழ்வது விசித்திரமே….!
வருத்தும் நினைவுகள்

புல்மோட்டை கவி நவீத்
புல்மோட்டை கவி நவீத்https://minkirukkal.com/author/muhammathunaveeth/
திருகோணமலை மாவட்டத்தில் புல்மோட்டை எனும் அழகிய கிராமத்தில் நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்தேன் எழுத்துக்களின் மேல் உள்ள ஆர்வத்தினால் கவரப்பட்டு பல்வேறு விதமான ஆக்கங்கள் எழுத ஆரம்பித்தேன் ஈரம் காயாத எழுத்துக்கள் எனும் புத்தகம் தற்போது எழுதி வருகின்றேன் சில நாட்களில் வெளியிடப்படும். இலங்கை சமுத்திரவியல் பல்கலைக்கழகத்தில் நீருயிரின கைத்தொழில் நீர்வள முகாமைத்துவம் முதலாவது ஆண்டின் கல்வி கற்கின்றேன்

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -