சகடக் கவிதைகள் – 24

மூட பிம்பம்

- Advertisement -

மூட பிம்பம்

கண்ணாடியில் பிம்பம் ஒன்று
கண் மூடி அமர்ந்திருக்க
காண்பவன் மட்டும் இங்கே
கண்ணுக்குத் தெரிவதில்லை

நிழல் இருக்க நிஜம் எங்கே?
குழல் இல்லாத ஓசை எப்படி?

கேள்விகள் துளைக்க
கண்கள் தானே திறக்க

திகைத்த பிம்பம் தலை சுற்றி
திக்கெங்கும் பார்த்து
தன் நிலை மறந்துபோய்
தன்முனைப்புக் கொண்டதாம்

பிரதிபலிக்கும் பொருளெல்லாம்
பிரதிகளின் பிரதிகளேயன்றி
பிரிதொன்றில்லை என்றுணராமல்

ஒன்றோடு ஒன்று சேந்த்தும்
ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டும்
ஓயாத சலனங்கள்

ஓய்விலா ஆட்டத்தால்
ஓய்ந்துபோக நேரும் வரை
பிரதிபலிப்பவன் யார் என்று
பிரித்தறியத்தான் முடியுமோ?

பிம்பம் தன்னை நிஜமென்று
பிரமை கொண்டு, தனித்தியங்கப்
பலவாறு முயன்றாலும்
பலிக்குமோ அதன் அறியாமை?

இந்த கவிதைத் தொகுப்பின் முந்தைய பகுதிகளைப் படிக்க இங்கே சொடுக்கவும்

ராகவ் மிர்தாத்
ராகவ் மிர்தாத்http://www.rakavmirdath.com
மனித உளவியலையே மாற்றக்கூடிய சக்தி படைத்த சினிமாவில் தானும் ஒரு தவிர்க்க முடியாத பங்காற்ற வேண்டுமென்ற தணியாத கலைத்தாகத்தால் உந்தப்பட்ட படைப்பாளி, இயக்குனர், எழுத்தாளர்.இவரது படைப்புகள் வெகுவிரைவில் வெள்ளித்திரையில் காணக்கிடைக்கும் என்பதில் மகிழ்ச்சி.தேசிய விருது பெற்ற “பாரம்" படத்தின் திரைக்கதை மற்றும் வசனகர்த்தா.இவருடைய “மிருணா” என்கிற குறும்படம் ரீகல்டாக்கீஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -