யமுனா வீடு – 38

தொடர் கவிதை

- Advertisement -

உரையாடலுக்கான சொற்களோடு
பின் அந்திப்பொழுதில்
சிறு புன்னகையைப்போன்று
இந்தக் கடற்கரையில்
அவள் மட்டும் இருக்கிறாள்
அமைதியாக நீளப்போகும் இரவின்
கடல்தொடும் ஆகாயம் பார்க்கும் அவள்
பைத்தியமாக இருக்கலாம்
அவளிருப்பைச் சுற்றியே ஒளிரப்போகும் பொழுது
செய்வதறியாத பொழுதில்
கடல் பார்க்கலாம்
மனதிற்குள் ஒலித்துச்சென்றது
அவளைச்சூழ்ந்த முகங்களையெல்லாம்
ஒருமித்துப்பார்த்தாள்
அவள் மறக்கவில்லை எதையும்
நினைவுகளின் வழியே
இந்தக் கடற்கரையில் நடந்தாள்
கால் தொடும்
ஒவ்வொரு அலையும்
இதயத்தை கரைத்து
அவளுள் துளிர்த்த கண்ணீரை
துடைத்துச் சென்றது
இந்த வாழ்வின்
பூரணத்துவத்தை பெற
யமுனா கடல் பார்த்து
நின்றுகொண்டிருக்கிறாள்
அவளன்பு உயிர்கொண்ட
வலுத்த அலையொன்று வருகிறது
யமுனா கடலை கடந்துவிடுவாள்

பாண்டித்துரை
பாண்டித்துரைhttps://minkirukkal.com/author/pandiidurai/
பெயர் இராஜேந்திரன் நீதிப்பாண்டி. (அப்பா பெயர் இராஜேந்திரன்). சொந்த ஊர் அ.காளாப்பூர் (சிவகங்கை மாவட்டம்) வணிகவியல் இளங்கலை படித்த நான் தற்போது சிங்கப்பூரில் கட்டுமானத்துறையில் கட்டுமான பாதுகாப்பு பிரிவில் மேலாளராக பணிபுறிகிறேன். 2006 முதல் பாண்டித்துரை எனும் பெயரில் எழுதிவருகிறேன். அவநிதாவின் சொல் & மாயா மது உதயா எனும் இரண்டு கவிதை நூல்களை எழுதியிருக்கிறேன். குறும்படம் மீது உள்ள ஆர்வத்தில் நண்பர்களுடன் இணைந்து சில குறும்பட முயற்சிகள் செய்துள்ளேன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -