யமுனா வீடு – 23

தொடர் கவிதை - 23

- Advertisement -

ஒவ்வொரு மரத்திற்கும்
ஒரு கதை இருந்தது
ஒவ்வொரு மரத்திற்கான கதையிலிருந்து
கிளை பரப்பிய காட்டைப்பற்றிய கதை
ஒரு பறவையின் மொழியில் எழுதப்பட்ட கதையை
கனவிலிருந்து விழித்தெழுந்த யமுனா
ஒரு மரத்திலிருந்து ஆரம்பித்து
காட்டைப் பற்றிய கதையாகச் சொன்னாள்
காட்டைப் பிளந்து கடந்து வந்ததொரு இசை
ஆத்மாவின் குரலாக ஒலித்துக்கொண்டிருக்க
சொல்லபடும் கதை
புரிந்துகொள்ளப்படுகிறது
காட்டின் கதை
காட்டின் பாதையைப்போல் வெவ்வேறு திசை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது
வலுத்த பெருமழை ஒன்றிற்கு
கதைக்கு இடையில்
ஒரு தேநீரைப் பருகச்சொன்னவள்
ஒரு யானையைப்போல
மிகச்சாதரணமாக காட்டின் கதையைக் கடத்திப்போனாள்

பாண்டித்துரை
பாண்டித்துரைhttps://minkirukkal.com/author/pandiidurai/
பெயர் இராஜேந்திரன் நீதிப்பாண்டி. (அப்பா பெயர் இராஜேந்திரன்). சொந்த ஊர் அ.காளாப்பூர் (சிவகங்கை மாவட்டம்) வணிகவியல் இளங்கலை படித்த நான் தற்போது சிங்கப்பூரில் கட்டுமானத்துறையில் கட்டுமான பாதுகாப்பு பிரிவில் மேலாளராக பணிபுறிகிறேன். 2006 முதல் பாண்டித்துரை எனும் பெயரில் எழுதிவருகிறேன். அவநிதாவின் சொல் & மாயா மது உதயா எனும் இரண்டு கவிதை நூல்களை எழுதியிருக்கிறேன். குறும்படம் மீது உள்ள ஆர்வத்தில் நண்பர்களுடன் இணைந்து சில குறும்பட முயற்சிகள் செய்துள்ளேன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -