முயல்

கவிதை

- Advertisement -

முயல் வாங்கிக் கொடுப்பதாக
நினைத்திருந்த
தேஜலுக்கு நேற்று
பிறந்தநாள்
இன்று வாழ்த்தினேன்

நேற்றுதான் பிறந்தேன் என்றவளுக்கு
தாமதவாழ்த்தென்று
காதுகளை இழுத்து உக்கிபோட்டேன்

பற்கள் தெரிய சிரித்தவளை
முயல் என்றேன்
மீண்டும் முயல் சிரித்தது
முயல் முயல் என்றேன்
பேச்சைத் துண்டித்து
முயல் தோழியோடு குதித்து ஓடியது.

பாண்டித்துரை
பாண்டித்துரைhttps://minkirukkal.com/author/pandiidurai/
பெயர் இராஜேந்திரன் நீதிப்பாண்டி. (அப்பா பெயர் இராஜேந்திரன்). சொந்த ஊர் அ.காளாப்பூர் (சிவகங்கை மாவட்டம்) வணிகவியல் இளங்கலை படித்த நான் தற்போது சிங்கப்பூரில் கட்டுமானத்துறையில் கட்டுமான பாதுகாப்பு பிரிவில் மேலாளராக பணிபுறிகிறேன். 2006 முதல் பாண்டித்துரை எனும் பெயரில் எழுதிவருகிறேன். அவநிதாவின் சொல் & மாயா மது உதயா எனும் இரண்டு கவிதை நூல்களை எழுதியிருக்கிறேன். குறும்படம் மீது உள்ள ஆர்வத்தில் நண்பர்களுடன் இணைந்து சில குறும்பட முயற்சிகள் செய்துள்ளேன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -