மரணித்த மர(ன)ங்கள்…..

கவிதை

- Advertisement -

ஆறறிவாய் உதித்தும்
ஜடமாகிறான் மனிதன் /
உயிரற்றும் உயர்திணையாகி
உரமாகின்றன மரங்கள்/

காற்றை உரித்து உயிரைக்
கொடுத்தும் /
ஆசுவாசப்படுத்தி இளைப்பாற
உடலை கொடுத்தும் /
நெஞ்சில் ஈரமற்றவனாய்
நன்றி கெட்டு/
உடலை சரிக்கும் நவீன
மனிதன் /

விருட்சமாய் உருப்பெற்று
மழையை வசமாக்கி /
சமநிலையில் உலகை வழிநடத்தி
வாழ்வளிக்கும் /
உயிரையே அழித்ததால் பார்
பாலைவனமாகி /
வறுமை வாழ்வாகி நகரமாக
நகர்கிறது/

நவீனெனும் மடமையில்
மனிதம் மரணித்தலையும்/
மனிதனிடம் பலியாகி
சிதையும் மரங்கள்/
கரு அழித்து பேரழிவிற்கு
வழிசமைத்து/
துட்சமாய் நினைத்து வேர்
களைந்து /

மரணித்த மர(ன)ங்களை
விதைதூவி விருட்சமாக்கி /
உரமிட்டு உயிர்ப்பித்திட
கை கோர்த்திடுவீர்/

Previous article
Next article
புல்மோட்டை கவி நவீத்
புல்மோட்டை கவி நவீத்https://minkirukkal.com/author/muhammathunaveeth/
திருகோணமலை மாவட்டத்தில் புல்மோட்டை எனும் அழகிய கிராமத்தில் நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்தேன் எழுத்துக்களின் மேல் உள்ள ஆர்வத்தினால் கவரப்பட்டு பல்வேறு விதமான ஆக்கங்கள் எழுத ஆரம்பித்தேன் ஈரம் காயாத எழுத்துக்கள் எனும் புத்தகம் தற்போது எழுதி வருகின்றேன் சில நாட்களில் வெளியிடப்படும். இலங்கை சமுத்திரவியல் பல்கலைக்கழகத்தில் நீருயிரின கைத்தொழில் நீர்வள முகாமைத்துவம் முதலாவது ஆண்டின் கல்வி கற்கின்றேன்

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -