ஓர் இரவில்தான்
கேள்விகள் கேட்கப்படுகிறது
கேள்விகளுக்குச்
சமாதானங்கள் தேவையில்லை
நுண்ணுணர்களைச் சொல்லவியலாத
மெய்யன்பு கொண்டோனை
ஏக இறைவன்
பார்த்துக்கொண்டுதான் இருக்கிறான்
உள் உணர்ந்த ஒரு சொல்லுக்காய்
பேரொளி கொண்டோரிடத்தில்
உள் உருகி
நாயிறாய் அமர்ந்திருப்பான்
அவன் தவறறிய
பார்த்துக்கொண்டிருக்கும்
கடல்கொள்ளட்டும்
கொண்ட அவன் மனம்
மாறப்போவதில்லை.
பொய்யன்பு கொண்டிருந்தால்
யமனவன் கைபிடித்திட
பிரமை கண்டவன் ஓடட்டும்
பிணம்போலக் கிடக்கட்டும்
கைகளைப்
பற்றிக்கொண்டிருப்பவன் முன்
யமுனா
நீ
ஓங்காரமாய்
நின்று கொண்டிரு