யமுனா வீடு – 19

தொடர் கவிதை - 19

- Advertisement -

இடம்பெயர்ந்தபொழுதில் துளிர்த்த கண்ணீர்
யமுனா

கைப்பைக்குள் மடித்து வைக்கப்பட்ட காகிதங்களில்
கனவுகளை பேசுவது
கனவுகளை எழுதுவது
கனவுகளை வரைவதென்று
சிதறியபொழுதில் எழுந்து நின்றாள்

நீளமான பொழுதுகளில்
கனவுகளை நிறைத்து
வெற்றிகொள்வாள்

இப்படி ஒரு பெண்ணாக
இருப்பதில் தவிப்பில்லாமல்
செதுக்கப்பட்ட வாழ்வில்
அன்புளி செய்கிறாள்.

திருப்தியாக உன்னிடம் தோற்பதாக சொல்லும் ஒருவனோடு
வல்லூற்றின்மேலேறி
பறப்பதாக கண்ட கனவை
யமுனா சொல்லக்கேட்ட கனவில்
கசிந்துலர்ந்தேன்

அன்பே யமுனா

யமுனா வாழும் வீடு ஒரு கொடை.

பாண்டித்துரை
பாண்டித்துரைhttps://minkirukkal.com/author/pandiidurai/
பெயர் இராஜேந்திரன் நீதிப்பாண்டி. (அப்பா பெயர் இராஜேந்திரன்). சொந்த ஊர் அ.காளாப்பூர் (சிவகங்கை மாவட்டம்) வணிகவியல் இளங்கலை படித்த நான் தற்போது சிங்கப்பூரில் கட்டுமானத்துறையில் கட்டுமான பாதுகாப்பு பிரிவில் மேலாளராக பணிபுறிகிறேன். 2006 முதல் பாண்டித்துரை எனும் பெயரில் எழுதிவருகிறேன். அவநிதாவின் சொல் & மாயா மது உதயா எனும் இரண்டு கவிதை நூல்களை எழுதியிருக்கிறேன். குறும்படம் மீது உள்ள ஆர்வத்தில் நண்பர்களுடன் இணைந்து சில குறும்பட முயற்சிகள் செய்துள்ளேன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -