யமுனா வீடு – 16

தொடர் கவிதை - 16

- Advertisement -

யமுனாவின் வீடு
அந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு
ஒரு அடையாளமாகிவிட்டது
அந்த தெருவை கடக்க நினைக்கும் புதியவர்
முகவரியை விசாரித்தால்
யமுனா வீட்டின் இடது புறமோ
வலது புறமோ என்றுதான் ஆரம்பிப்பார்கள்
பச்சை நிற கிரீல் கேட்டுடன்
அடையாளமாகிவிட்ட யமுனாவின் வீட்டை
கடந்து செல்லும் புதியவருக்கு
கற்பனையாக வந்து செல்லும் யமுனா
ஒருபுறம் தலைசாய்த்து
பின்
இருபுறமும் தலை ஆட்டி
பல் வெளித்தெரிய ஒருபோதும் புன்னகைத்ததில்லை

பாண்டித்துரை
பாண்டித்துரைhttps://minkirukkal.com/author/pandiidurai/
பெயர் இராஜேந்திரன் நீதிப்பாண்டி. (அப்பா பெயர் இராஜேந்திரன்). சொந்த ஊர் அ.காளாப்பூர் (சிவகங்கை மாவட்டம்) வணிகவியல் இளங்கலை படித்த நான் தற்போது சிங்கப்பூரில் கட்டுமானத்துறையில் கட்டுமான பாதுகாப்பு பிரிவில் மேலாளராக பணிபுறிகிறேன். 2006 முதல் பாண்டித்துரை எனும் பெயரில் எழுதிவருகிறேன். அவநிதாவின் சொல் & மாயா மது உதயா எனும் இரண்டு கவிதை நூல்களை எழுதியிருக்கிறேன். குறும்படம் மீது உள்ள ஆர்வத்தில் நண்பர்களுடன் இணைந்து சில குறும்பட முயற்சிகள் செய்துள்ளேன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -