யமுனாவீடு -65

தொடர் கவிதை

- Advertisement -

கடற்கரைக்கு வரும்
ஒவ்வொருவரும்
அவர்களைத் தண்டித்துக்கொண்டு
காணாமல் போகின்றனர்.

நள்ளிரவில் நித்திரையிலிருந்து
திடுக்கிட்டு எழுந்து
காணாமல் போனவர்களைத்
தேடிப்பார்க்கிறேன்.

பெரும்இரைச்சலுக்கிடையில்
அண்ணாந்து பார்ப்பவனுக்குத்
தெரியும் பிறை
அழைத்துச்செல்கிறது
கடலுக்கு

அவர்கள் எப்போதாவது
திரும்ப அலைகளேறி வந்திவிடுவார்கள் என்றே
கடல் வேடிக்கைப்பார்க்கிறது.

இந்த இடத்தை விட்டு,
இந்த நகரத்தைவிட்டு
யாவரும் செல்வதற்கு
ஒரு இடமிருக்கையில்
கையசைத்து
ஒவ்வொருவராக வெளியேறுகிறார்கள்.

தொலைவிலிருந்து பார்க்கிறாய்
யமுனா இல்லை
யமுனா இருக்கிறாள்
ஆத்ம திருப்தியுடன்
மகிழ்ச்சியான காலத்தையே யமுனாவும் பார்க்கவேண்டும்.

ஒரு பறவையின்
திசையறிந்தவனுக்கு
பறந்து சென்றடையத்தோன்றும்
உயரமான மலை வரக்கூடும்
மெல்ல நடந்து போ
கைகளைக்கொடுக்க யமுனா காத்திருப்பாள்.

பாண்டித்துரை
பாண்டித்துரைhttps://minkirukkal.com/author/pandiidurai/
பெயர் இராஜேந்திரன் நீதிப்பாண்டி. (அப்பா பெயர் இராஜேந்திரன்). சொந்த ஊர் அ.காளாப்பூர் (சிவகங்கை மாவட்டம்) வணிகவியல் இளங்கலை படித்த நான் தற்போது சிங்கப்பூரில் கட்டுமானத்துறையில் கட்டுமான பாதுகாப்பு பிரிவில் மேலாளராக பணிபுறிகிறேன். 2006 முதல் பாண்டித்துரை எனும் பெயரில் எழுதிவருகிறேன். அவநிதாவின் சொல் & மாயா மது உதயா எனும் இரண்டு கவிதை நூல்களை எழுதியிருக்கிறேன். குறும்படம் மீது உள்ள ஆர்வத்தில் நண்பர்களுடன் இணைந்து சில குறும்பட முயற்சிகள் செய்துள்ளேன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -