சகடக் கவிதைகள் – 37

பருந்துப் பார்வை

- Advertisement -

பருந்துப் பார்வை

சிறகுகளை விரிக்கும் வரை
தெரிவதில்லை எது அற்பமென்று

எரிமலைகூட மத்தாப்பாய் தோன்றும்
எதிரியும்கூட நண்பனாய் தெரிவான்

தூரம் செல்லச் செல்ல
தாண்ட முடியா உயரங்களும்
தூசியாய் தோன்றும்

மேகத்தை தொட்டவனுக்கு
சூரியன் எக்காலத்திலும் மறைவதில்லை

ஆழ்கடலில் மிதப்பவன்
ஆழிப்பேரலைகளுக்கு
அஞ்சுவதில்லை

இலவச மெளனத்தின் இன்பத்தை
நுகரத் தெரியாதவனே
சச்சரவுகளை விலை கொடுத்து
வாங்குகிறான்

இருப்பதோடு சமாதானமாய்
இருக்கத் தெரிந்தவனே
இவ்வுலகை ஆளும் சக்கரவர்த்தி

தன் இருப்பைக் காண
கண்ணாடியை நம்பியவனே
சுக்கல் சுக்கலாக
உடைத்தெறியப்படுகிறான்

எவருக்கோ நடப்பதுபோல்
எட்ட நின்று பார்ப்பவனை
எவற்றால் தான் வெல்ல முடியும் ?

இந்த கவிதைத் தொகுப்பின் முந்தைய பகுதிகளைப் படிக்க இங்கே சொடுக்கவும்

ராகவ் மிர்தாத்
ராகவ் மிர்தாத்http://www.rakavmirdath.com
மனித உளவியலையே மாற்றக்கூடிய சக்தி படைத்த சினிமாவில் தானும் ஒரு தவிர்க்க முடியாத பங்காற்ற வேண்டுமென்ற தணியாத கலைத்தாகத்தால் உந்தப்பட்ட படைப்பாளி, இயக்குனர், எழுத்தாளர்.இவரது படைப்புகள் வெகுவிரைவில் வெள்ளித்திரையில் காணக்கிடைக்கும் என்பதில் மகிழ்ச்சி.தேசிய விருது பெற்ற “பாரம்" படத்தின் திரைக்கதை மற்றும் வசனகர்த்தா.இவருடைய “மிருணா” என்கிற குறும்படம் ரீகல்டாக்கீஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -